'மெல்ல விடை கொடு விடை கொடு மனமே'.. அரசு பள்ளி ஆசிரியரை போக விடாமல் காலை பிடித்து அழுத மாணவிகள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதை கேட்டு கலங்கிப்போன அரசு பள்ளி மாணவிகள்,. அவரது காலை பிடித்து கதறி அழுது போக வேண்டாம் என்று கூறியது காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான பாசம் என்பது, தாய், தந்தைக்கு அடுத்தபடியானது. அவர்களால் தான் மாணவருக்கு நல்ல கல்வி கற்றுத்தருகிறார்கள். அதேபோல் மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்றுத்தருகிறார்கள். வாழ்க்கையில் எப்படி இருந்தால் ஜெயிக்கலாம்.

Teacher School Student

எப்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சுற்றியுள்ள சூழல்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் ஆசிரியர்களே கற்றுதருகிறார்கள். ஒரு ஆசிரியர் நினைத்தால் மாணவர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். அவர்கள் கற்றுத்தரும் கல்வி அவ்வளவு சக்தி வாய்ந்தது.

மாணவர்களை பொறுத்தவரை ஆசிரியர்களை உணர்வு பூர்வமாக தங்களின் குருவாக தங்களுக்கு சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களை அணுகுவார்கள். திடீரென வேறு இடத்திற்கு இடம் மாறுதல் சென்று போய்விட்டால், அவர்களால் அதை ஏற்க முடியாது. ஆசிரியர்கள் இடம் மாறி செல்லும் போது, அவர்களை போகவிடாமல் மாணவ மாணவிகள் தடுப்பார்கள். தங்களுக்கு பிடித்த ஆசிரியர் என்றால், அவரை போகவிடாமல் தடுத்து கண்ணீர்விட்டு அழுகவும் செய்வார்கள். தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் மேலச்செருவு மண்டலம் ஹேம்லதாண்டா கிராமத்தில் ஷேக் மஸ்தான் என்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருகக்கு புரமோசனுடன் கூடிய பணியிடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் விடைபெற்று சென்ற ஆசிரியரின் காலை பிடித்து கதறி அழுது, போக வேண்டாம் என்று கூறினார்கள்.

தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் தலைமை ஆசிரியர் இடமாறி செல்வதை அறிந்து மாணவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். சூர்யாபேட்டை ஹேம்லதாண்டா கிராமத்தில் ஷேக் மஸ்தான் என்பவர் ஒன்பது ஆண்டுகளாக ஹிந்தி கற்பித்தபடி, கிராமத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது ஆசிரியர் பணியில் மிகுந்த ஈடுபாடு காட்டியுள்ளார். ஷேக் மஸ்தான் பள்ளியை பெரிய அளவில் தரம் உயர்த்தியதுடன், மாவட்ட அளவில் அதிக மாணவர் சேர்க்கை பெற்ற பள்ளியாக மாற்றினார். இன்றும் போட்டி போட்ட பல பெற்றோர் சேர்க்கும் அரசு பள்ளியாக சூர்யபேட்டை மாவட்டத்தில் விளங்குகிறது. இவரை அந்த மாவட்டத்தில் பலரும் பாராட்டி வந்தார்கள்.

மிகவும் சாதாரணமாக இருந்த அந்த அரசு பள்ளியை நன்கொடையாளர்கள் உதவியுடன் பல வசதிகள் செய்து தர முயற்சிகள் மேற்கொண்டார். பள்ளியும் வேறலெவலில் மாறியது. அதுமட்டுமின்றி பள்ளியில் மாணவர்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே தீர்த்து வைத்துள்ளார்.

மாணவர்களை இந்தியாவின் தலைச்சிறந்த குடிமக்களாக உருவாக்கும் பணியை சிறப்பாகச் செய்த தலைமை ஆசிரியர் மஸ்தான், சமூக உதவியாளராகப் பதவி உயர்வு பெற்று, தோகரை என்ற ஊருக்கு செல்கிறார். மெல்ல விடை கொடு , விடை கொடு மனமே என்ற மனநிலையுடன் ஆசிரியர்கள் மாணவர்களிடம் விடைபெற்றார் தலைமை ஆசிரியர் மஸ்தான். ​​மாணவர்கள் உணர்ச்சியை அடக்க முடியாமல் கதறி அழுதனர். தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் மாணவர்களை ஆறுதல்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் அழுது கொண்டே இருந்தனர். இந்த வீடியோ சமூகஊடகங்களில் வெளியாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+