Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உல்லாசத்தில் மாணவனுடன்.. சைலண்டா ஊரை கூட்டிய கணவர்! திருதிருனு விழித்த மனைவி! இவரெல்லாம் ஒரு டீச்சர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கள்ளக்காதல்கள் அட்டகாசங்கள் பெருகி வரும் நிலையில், குடும்ப உறவுகளும் சிதைந்து வருகின்றன.. கள்ளக்காதல் வன்முறைகள் அதிகமாவதும், இது தொடர்பான குற்றங்கள் பெருகி கைது நடவடிக்கைகள் அதிகமாகவும் பெருகி வருகிறது. இதோ ஆந்திர பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர், தகாத உறவால் பொதுவெளியில் அசிங்கப்பட்டுள்ளார்.. ஒழுக்கத்தையும், கல்வியையும் போதிக்கும் ஆசிரியர், ஆசிரியைகளே இப்படி தவறுகளை செய்தால், மாணவ, மாணவிகளை வழிநடத்துவது யார்??

ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன்.. இவருக்கு 40 வயதாகிறது.. அதே பகுதியில் இறால் பண்ணை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் நாகலட்சுமி.. 33 வயதாகிறது.

Teacher College professor Student

நாகலட்சுமி பட்டதாரி

நாகலட்சுமி படித்த பட்டதாரி.. அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் டீச்சராக பணியாற்றி வருகிறார்.. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.. இந்நிலையில், நாகலட்சுமிக்கும், அதே கல்லூரியில் படிக்கும் 24 வயது மணிகண்டன் என்ற மாணவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நட்பு நாளடைவில் தகாத உறவாக மாறியிருக்கிறது.

லட்சுமணன் தினந்தோறும் இரவு நேரத்தில், தன்னுடைய இறால் பண்ணைக்கு காவல் காக்க செல்வாராம்.. அந்த நேரத்தில் மாணவனை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்திருக்கிறார்.. இந்த விஷயம் லட்சுமணனின் காதுக்கு சென்றுள்ளது.. ஆரம்பத்தில் இதனை லட்சுமணன் நம்பவில்லை..

உண்மைத்தன்மை என்ன

மாணவன் மணிகண்டனுடன் நாகலட்சுமி வெளியிலும் அடிக்கடி சந்தித்து ஊர் சுற்றி வந்திருக்கிறார்.. இதெல்லம் மீண்டும் கணவனுக்கு தெரியவந்தது.. அதற்கேற்ப நாகலட்சுமியின் நடவடிக்கையிலும் மாற்றம் தென்பட்டது. எனவே, உண்மைத்தன்மையை குறித்து அறிய நினைத்தார்.. ஒருவேளை உண்மையாக இருந்தால், மனைவியை கையும் களவுமாக பிடிக்கவும் திட்டமிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் இறால் பண்ணைக்கு லட்சுமணன் கிளம்பி சென்றுவிட்டார்.. நாகலட்சுமியும் வழக்கம்போல் மாணவனுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார்... 7 வயது மகன் தூங்கிக்கொண்டிருந்த அதே அறையில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்..

வீட்டில் உல்லாசம்

ஆனால், திடீரென அதிகாலை நேரத்திலேயே லட்சுமணன் வீட்டுக்கு வந்தார்... வாசல் கதவை தட்டாமல், ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது மனைவியும், மாணவனும் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார்.. ஆனாலும் சத்தம் போடாமல், வீட்டின் வெளியே பூட்டு போட்டுவிட்டார்.

உடனடியாக போலீசுக்கும், உறவினர்களுக்கும் போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தார்.. போலீசார் வந்தபிறகு, கதவை திறந்து இருவரையும் வெளியே அழைத்தனர்.. அவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.

ஆனாலும் லட்சுமணனுக்கு ஆவேசமும், ஆத்திரமும் அடங்கவில்லை.. மாணவன் மணிகண்டனை சரமாரியாக தாக்க முயன்றார்.. எனினும் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.. பிறகு மணிகண்டனை கைது செய்து விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர். போலீசார் டூவீலரில் மணிகண்டனை நடுவில் உட்காரவைத்து, அழைத்துசெல்லும் வீடியோ, போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

உண்மைத்தன்மை என்ன

மாணவன் லட்சுமணனுடன் நாகலட்சுமி வெளியிலும் அடிக்கடி சந்தித்து ஊர் சுற்றி வந்திருக்கிறார்.. இதெல்லம் மீண்டும் கணவனுக்கு தெரியவந்தது.. அதற்கேற்ப நாகலட்சுமியின் நடவடிக்கையிலும் மாற்றம் தென்பட்டது. எனவே, உண்மைத்தன்மையை குறித்து அறிய நினைத்தார்.. ஒருவேளை உண்மையாக இருந்தால், மனைவியை கையும் களவுமாக பிடிக்கவும் திட்டமிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் இறால் பண்ணைக்கு லட்சுமணன் கிளம்பி சென்றுவிட்டார்.. நாகலட்சுமியும் வழக்கம்போல் மாணவனுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார்... 7 வயது மகன் தூங்கிக்கொண்டிருந்த அதே அறையில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்..

வீட்டில் உல்லாசம்

ஆனால், திடீரென அதிகாலை நேரத்திலேயே லட்சுமணன் வீட்டுக்கு வந்தார்... வாசல் கதவை தட்டாமல், ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது மனைவியும், மாணவனும் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார்.. ஆனாலும் சத்தம் போடாமல், வீட்டின் வெளியே பூட்டு போட்டுவிட்டார்.

உடனடியாக போலீசுக்கும், உறவினர்களுக்கும் போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தார்.. போலீசார் வந்தபிறகு, கதவை திறந்து இருவரையும் வெளியே அழைத்தனர்.. அவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.

ஆனாலும் லட்சுமணனுக்கு ஆவேசமும், ஆத்திரமும் அடங்கவில்லை.. மாணவன் மணிகண்டனை சரமாரியாக தாக்க முயன்றார்.. எனினும் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.. பிறகு மணிகண்டனை கைது செய்து விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர். போலீசார் டூவீலரில் மணிகண்டனை நடுவில் உட்காரவைத்து, அழைத்துசெல்லும் வீடியோ, போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+