Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைக்கிள் விவகாரம்: போலீஸ் கான்ஸ்டபிளால் தீ வைக்கப்பட்ட 11 வயது சிறுமி பலி

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிளால் தீ வைக்கப்பட்ட 11 வயது சிறுமி இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் யாஸ்மீன் கான்(11). அவர் பக்கத்து வீட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் பிரகாஷ் ஜாரோலியா வசித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை மதியம் யாஸ்மீன் பிரகாஷின் வீட்டுக்கு சென்று அவரின் சைக்கிளை எடுத்து ஓட்டியுள்ளார்.

யாஸ்மீன் தன்னிடம் கேட்காமல் தனது சைக்கிளை எடுத்து ஓட்டியதை பார்த்த பிரகாஷ் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவர் சிறுமியை அடித்துள்ளார். அதன் பிறகு தனது வீட்டில் இருந்து உடல் முழுவதும் தீ எரிய வெளியே அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தார் யாஸ்மீன். பிரகாஷ் தான் யாஸ்மீன் மீது தீ வைத்ததாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார்.

இது குறித்து யாஸ்மீனின் தாய் ரிஹானா கூறுகையில்,

சம்பவம் நடந்தபோது நான் வீட்டில் இல்லை. எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் பிரகாஷ் அவரின் சைக்கிளை என் மகள் அனுமதியின்று எடுத்து ஓட்டியதால் அவரை அடித்துள்ளார். மேலும் எங்கள் வீட்டுக்குள் வைத்து எங்கள் மகள் மீது அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார் என்று அக்கம்பக்கத்தினர் என்னிடம் தெரிவித்தனர். அவரை தண்டிக்க வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+