பெங்களூரில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுக்காரர்
பெங்களூர்: பெங்களூரில் 12 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பெங்களூரில் உள்ள சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத்(37). சைக்கிள் கடை நடத்தி வருகிறார். அவரது பக்கத்து வீட்டில் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். அந்த சிறுமி அடிக்கடி மஞ்சுநாத்தின் வீட்டிற்கு வந்து விளையாடுவார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சிறுமி மஞ்சுநாத்தின் வீட்டிற்கு வந்துள்ளார். விளையாட வந்த சிறுமியை மஞ்சுநாத் பாலியல் பலாத்காரம் செய்தார். விளையாட சென்ற மகள் வீட்டிற்கு தாமதமாக சோர்வாக வந்ததை பார்த்த அவரின் தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறுமியிடம் கேட்டதற்கு அவர் நடந்ததை தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தாய் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.