ஷாக் சம்பவம்! ஒன்றோடு ஒன்று மோதிய ரோப் கார்கள்.. ஜார்கண்ட் மாநிலத்தில் மோசமான விபத்து
ராஞ்சி: ஜார்கண்ட் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலையில் ரோப் கார்கள் ஒன்றொரு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுட் மலையில் பாபா பைடியநாத் மலைக்கோயில் உள்ளது. இங்கு தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற மீட்புப் படையினர், ரோப் கார்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

விபத்து
திரிகுட் மலையில் அமைந்துள்ள பாபா பைடியநாத் கோயிலுக்குப் பக்தர்கள் சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 18 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ரோப் கார்களில் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணிகள்
இந்த ரோப்காரில் 12 கேபின்களில் குறைந்தது 48 பேர் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மீட்புப் பணி நடந்து வருகிறது. இந்த விபத்து ஏற்பட்ட உடன் அங்கிருந்த ரோப்கார் நிறுவன மேலாளரும் மற்ற ஊழியர்களும் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்பி சுபாஷ் சந்திரா மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகிறார்.

என்ன காரணம்
இந்த விபத்திற்கான சரியான காரணம் என்னவென்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேபிள் கார்கள் மோதியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். முழு விசாரணை நடத்தும் போது விபத்திற்கான காரணம் தெரிய வரும். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உடன் அக்கிராம மக்களும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பாக மீட்பு
இது குறித்து துணை கமிஷனர் மஞ்சுநாத் பஜந்த்ரி கூறுகையில், " நிலைமை இப்போது முழுவதுமாக கட்டுக்குள் இருக்கிறது. சிலர் ரோப்கார் கேபின்களில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளனர்" என்றார். இந்த விபத்து தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது உத்தரவின்படியே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications