கேரளா சொகுசு படகு கவிழ்ந்து விபத்து.. 21 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்! பலி உயரும் என அச்சம்!
மலப்புரம் : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு இன்று இரவு எதிர்பாராதவிதமாக தூவல் தீரம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தற்போது வரை 21 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பறப்பனங்காடி பகுதியில் தூவல் தீரம் என்ற இடத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் 21 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீட்கப்பட்டவர்களை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 30 பேர் வரை நீரில் மூழ்கியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் அடங்குவர். மே 7ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் படகு கவிழந்து உள்ளது. முன்னதாக, கேரள மாநில அமைச்சர் அப்துர் ரஹ்மான், படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவருகிறது. . சுமார் 8 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Malappuram, Kerala | Six people died after a tourist boat capsized near Tanur in Malappuram district of Kerala. Rescue operations are underway. pic.twitter.com/gPi0u2HuIi
— ANI (@ANI) May 7, 2023
இந்தப் படகில் அதிகம் பேர் பயணம் செய்தது படகு கவிழ்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. 25 பேர் பயணிக்கத்தக்க படகில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்ததே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்தவர்களை காப்பாற்ற முடியவில்லை என படகில் இருந்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். மீட்புப் படையினருடன் உள்ளூர் மீனவர்களும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications