ஸ்பெக்ட்ரம்: ஆதாரம் இருந்தால் சார்ஜ்சீட்டில் பெயர் இல்லாதவரையும் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்பட ஏராளமானோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த ஊழல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ தலைமையில் கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, போதுமான ஆதாரம் இருந்தால், குற்றம்சாட்டப்படாத மற்றும் குற்றப் பத்திரிகையில் இடம் பெறாத நபரைக் கூட நீதிமன்றம் விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications