காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்.. 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியதில் வாகனத்தில் சென்ற மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் காஷ்மீரில் இன்று மாலை நடந்துள்ளது.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் புல்வானா மாவட்டத்தின் பம்போர் என்ற இடத்தில், ராணுவ பாதுகாப்பு வாகனங்கள் மீது மறைந்திருந்த தீவிரவாதிகள் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்ரகள் வீர மரணமடைந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். அவர்களை ராணுவம் தேடி வருகிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கோபம், இந்திய ராணுவத்தின் மீது திரும்பியுள்ளது.
எனவேதான் காஷ்மீரில் சமீப காலமாக ராணுவத்தினரை குறி வைத்து தீவிரவாதிகள் கொடும் தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications