3 வருடத்தில் 5 லட்சம் ஏக்கரில் ஆர்கானிக் விவசாயம்.. ரசாயன மருந்துகளுக்கு குட்பை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும்வகையில் அடுத்த 3 வருடங்களில், 5 லட்சம் ஏக்கர் நிலம், ஆர்கானிக் விவசாய திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும், என்று, 2016-17ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
விவசாயிகள் நலனுக்காக ரூ.35984 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளேன். விவசாயிகளின் வருமானம், அடுத்த 5 வருடங்களில் இரண்டு மடங்காக உயரும். இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்தில், அடுத்த 3 வருடங்களில், 5 லட்சம் ஏக்கர் நிலம், ஆர்கானிக் விவசாய திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும்.

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்கு இந்த இயற்கை விவசாய உற்பத்தி பொருட்கள் பயன்படுத்தப்படும். ரசாயன உரம், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடற்ற இதுபோன்ற ஆர்கானிக் விவசாயம் இக்காலகட்டத்திற்கு அவசியம்.












Click it and Unblock the Notifications