தாடியை எடுத்தாதான் கல்யாணம்.. மத்திய பிரதேச திருமண மேடையில் நடந்த பரபரப்பு!
மணமகன் தாடியை எடுத்துவிட்டு வந்ததால்தான் திருமணம் செய்து வைப்போம் என்று மத்திய பிரதேசத்தில் கல்யாணம் ஒன்று நிறுத்தப்பட்டு இருக்கிறது.
Recommended Video

போபால்: மணமகன் தாடியை எடுத்துவிட்டு வந்ததால்தான் திருமணம் செய்து வைப்போம் என்று மத்திய பிரதேசத்தில் கல்யாணம் ஒன்று நிறுத்தப்பட்டு இருக்கிறது.
கந்தவா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. போலீஸ் வந்து பிரச்னையை தீர்க்கும் அளவிற்கு இந்த சம்பவம் சென்று உள்ளது.
கடைசியில் நீண்ட போராட்டத்திற்கு பின் இந்த திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதற்கு பின்பும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் அடங்கி இருக்கிறது.

தாடி பிரச்சனை
மணமகன் 'மங்கல் சௌகான்' தாடி வளர்த்ததுதான் பிரச்சனை ஆகி இருக்கிறது. இதற்காக மணமகள் ருபாலியின் குடும்பத்தில் பிரச்சனை செய்து உள்ளார்கள். தாடி வைத்த மாப்பிள்ளைக்கு கண்டிப்பாக பெண் கொடுக்க முடியாது என்று சண்டை போட்டு இருக்கிறார்கள்.

கல்யாணத்தை நிறுத்தினார்கள்
இதனால் உடனடியாக கல்யாணத்தை நிறுத்தினார்கள். மொத்தமாக 12 மணிநேரம் கல்யாணம் நடக்காமல் இருந்துள்ளது. மாப்பிள்ளை என்ன நடந்தாலும் தாடியை வெட்ட மாட்டேன் என்று சண்டை போட்டு இருக்கிறார்.

போலீஸ் வந்தது
இதன் உச்சகட்டமாக போலீசில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. 12 மணி நேரம் கழித்து போலீஸ் வந்து சமாதானம் பேசினார்கள். பின் பெண் வீட்டாரை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்து இருக்கிறார்கள்.

எடுத்துவிட்டார்
போலீஸ் தலையிட்ட பின் மணமகன் தன்னுடைய தாடியை எடுத்து இருக்கிறார். அதற்கு பின்பே அவர் மணமேடையில் உட்கார மணமகள் குடும்பம் அனுமதித்துள்ளது. இந்த சம்பவம் அந்த மாநிலம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications