ரயில் மோதி உருக்குலைந்த யானை.. நடக்க முடியாமல் தவழ்ந்த காட்சி.. மனதை உருக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ரயில் மோதி உருக்குலைந்த யானை.. நடக்க முடியாமல் தவழ்ந்த காட்சி|elephant dies after being hit by train

    கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜல்பாய்குரி மாவட்டத்தில் இன்டர்சிட்டி ரயில் மோதி படுகாயமடைந்த யானை ஒன்று நடக்க முடியாமல் தவழ்ந்து சென்ற காட்சி காண்போர் மனதை உருக வைத்தது.

    மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பனார்ஹட் நக்ராகடா வழித்தடத்தில் நேற்று காலை சிலிகுரி- துப்ரி இடையே இன்டர்சிட்டி ரயில் சென்று கொண்டிருந்தது.

    A video shows that train hits elephant and drags it to 30 metre in West Bengal

    அப்போது காலை 8 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தது. அச்சமயம் யானை மீது ரயில் வேகமாக மோதியது. இதனால் அந்த யானை 30 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டது.

    இதில் யானையின் உடல் முழுவதும் படுகாயமடைந்தது. இதனால் ரயிலின் எஞ்சின் பகுதியும் சேதமடைந்தது. உடம்பில் ஏராளமான சிராய்ப்புகளுடன் ரத்தம் சொட்ட சொட்ட அந்த யானை தவழ்ந்து சென்றது.

    A video shows that train hits elephant and drags it to 30 metre in West Bengal

    பின்னர் ஒரு மரத்தின் அருகே எழுந்து நின்றது. இந்த காட்சியை ரயில் பயணிகள் வீடியோவாக எடுத்தனர். மிகவும் அழகாக கம்பீரமாக நடந்து வரும் யானை இப்படி தவழ்ந்ததை கண்டு பயணிகள் கண்கலங்கினர்.

    விபத்து நடந்த பகுதியானது யானைகள் நடமாடும் பகுதியாகும். காயமடைந்த பெண் யானையை வனத்துறை அதிகாரிகள் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றைய தினம் முழுவதும் அவ்வழியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    2002-ஆம் ஆண்டு அலிபுக்தார் சந்திப்பை அகல ரயில் பாதையாக மாற்றியதை அடுத்து வேகமாக இயக்கப்பட்ட ரயில்களால் 65 யானைகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+