காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி.. கண்காட்சியில் தனுஷ், நயன்தாரா போஸ்டர்.. காரணம் என்ன?
வாரணாசி: காசி நகரில் தொடங்கியுள்ள காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியில் நடிகர் தனுஷ், நயன்தாரா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களின் புகைப்படங்கள் என்ன காரணத்திற்காக கண்காட்சியில் இடம்பெற்றது என்பதை பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் கடந்த 2 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு - காசி இடையிலான பழங்கால உறவை புதுப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து 3வது ஆண்டாக நடக்கும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்கவுள்ளது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 10 நாட்கள் நடக்கும் இந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து 2,400 பேர் பங்கேற்க உள்ளனர். இதுமட்டுமல்லாமல் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 200 பேர் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து ரயிலில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்பவர்களை மகா கும்பமேளாவில் ஒரு இரவு தங்க வைக்கவும், அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்முறை காசி தமிழ்ச் சங்கமத்தின் கருப்பொருளாக அகத்திய முனிவர் இருக்கிறார்.
காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான சிறந்த இணைப்பாக அகத்தியர் கருதப்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனிடையே காசி தமிழ்ச் சங்கமத்தில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த புகைப்பட கண்காட்சியில் அதிகளவில் திரை பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். பிரபலங்களின் புகைப்படங்களை வைத்தால், எளிதாக தொடர்புபடுத்தி கொள்ள முடியும் என்பதால் செய்யப்பட்டிருக்கிறது.
நடிகர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் கலை கலாச்சாரம் என்ற அடிப்படையில் தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலை, கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்டதே சினிமா என்பதால், சினிமா கலைஞர்களின் புகைப்படங்கள் இருக்கின்றன.
அதேபோல் அகத்தியர், பாரதியார், திருவள்ளுவர், ஒளவையார், அப்துல் கலாம் உள்ளிட்டோர் குறித்த கருத்துகள், புகைப்படங்கள் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ளது. கங்கை நதிக் கரை ஓரத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications