10வது பாஸ்.. +1ல் பெயில்.. டுபாக்கூர் சர்ட்டிபிகேட் கொடுத்து வேலையில் சேர்ந்த ஏர் இந்தியா விமானி
டெல்லி : ஏர் இந்தியாவின் மூத்த விமானி ஒருவர், போலி பிளஸ் 2 சான்றிதழைத் தந்து பணிக்கு சேர்ந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சஸ்பெண்ட் ஆகியுள்ளார். அவர் வெறும் பத்தாவது மட்டுமே பாஸ் ஆகியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஏர்பஸ் கமாண்டராக பணிக்கு சேர்ந்தார் ஏ பி கட்டாலே. இந்த நிலையில், இவரது அக்கா டாக்டர் மனீஷ் கனகாளி ஒரு புகார் அளித்தார். அதில், தனது தம்பி, பத்தாவது படித்துள்ளதாகவும், பிளஸ் ஒன்னில் பெயில் ஆனதால், பிரைவேட்டாக பிளஸ்டூ தேர்வு எழுதியாகவும், அதில் பெயில் ஆகி விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து போலிச் சான்றிதழைக் கொடுத்து ஏர் இந்தியாவில் பணிக்கு சேர்ந்திருப்பதாகவும், விமான போக்குவரத்து ஆணையரிடம் அவர் அளித்த புகாரி்ல் கூறியிருந்தார்.
அவரின் புகாரின் அடிப்படையில் கட்டாலேயின் சான்றிதழ் மீண்டும் சரி பார்க்கப்பட்டது. அப்போது, அவர் போலி கல்விச் சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கட்டாலேவை பணி இடைநீக்கம் செய்து ஏர் இந்தியா உத்தரவிட்டது. இந்தத் தகவலை ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக விமான போக்குவரத்து ஆணையத்துக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும், கட்டாலே மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மெற்கொள்ளப் படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு முதல் இதே போல் போலிச் சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்ததாக, பல்வேறு விமான நிறுவனங்களில் இருந்து சுமார் 15க்கும் மேற்பட்டோர் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications