குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் ஒருமனதாக தேர்வு!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்பதால் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான குஜராத் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆனந்திபென் படேல் முன்மொழியப்பட்டதை. இதை அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் வழிமொழிந்தனர்.
இதனைத் தொடர்ந்து குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 73 வயதாகும் ஆனந்திபென் படேல் பள்ளிக்கூட ஆசிரியையாக வாழ்க்கையை தொடங்கி இன்று முதல்வராக தேர்வாகியிருக்கிறார்.
குஜராத் மாநிலத்தின் முதலாவது பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஆனந்திபென் படேல். அவர் நாளை மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் கமலா பெனிவால் பதவியேற்பு செய்து வைக்கிறார்.
ஆனந்த கண்ணீர்..
ஆனந்திபென் படேல் புதிய முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது ஆனந்திபென் படேல் இடைவிடாமல் ஆனந்த கண்ணீர்வடித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு பிரதமர் பதவியேற்க உள்ள நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications