அதிர்ந்த ஆந்திரா.. வேலையை காட்டினாரா ஜெகன்? ஒரே வீட்டில் 700 ஓட்டு! 6000 டிடிபி ஆதரவாளர்கள் நீக்கம்
அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அங்கு ஏற்பட்டு இருக்கும் மோசடி வாக்கு பிரச்சனை பொதுமக்கள் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.
ஆந்திர பிரதேசத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியை வீழ்த்தி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி முதல் முறையாக முதலமைச்சர் ஆனார்.

2024 ஆம் ஆண்டு மே மாதம் அங்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கான பணிகளில் இப்போதே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இறங்கிவிட்டன. இந்த நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் போலி வாக்குகள் பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் இந்த பிரச்சனை முதலில் ஏற்பட்டது.
அங்குள்ள ஒரே குடும்பத்தில் இருந்து மட்டும் 700 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சிகர தகவலை அம்மாநில ஊடகங்கள் வெளியிட்டன. இது தொடர்பாக தொடர்ந்து ஆவணங்களை சேகரித்தப்போது ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
உரவகோண்டா பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 6000 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த பிரச்சனை தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பயவுலா கேஷவ் என்பவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் அளித்தார். தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக்கொண்டே இருந்து உள்ளார்.
இந்த நிலையில் தற்போது தலைமை தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வந்து உள்ளது. போலி வாக்குகள் மற்றும் வாக்காளர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்ட 2 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 2 மண்டல அதிகாரிகள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications