மோடியை குறிவைத்து தாக்குதல்.. அசார் அமைச்சர் இதில் பலியாவார்.. மிரட்டல் நபரை கைது செய்த போலீஸ்
குவகாத்தி: பிரதமர் மோடி மீது வரும் 2021ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடக்கும் என்று கணித்தவரை அஸ்ஸாம் போலீசார் கைது செய்தனர்.
அவரது கணிப்பின்படி 2021ம் ஆணடு குவகாத்தியில் நடக்கும் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடக்கும் என்றும் அதில் அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கொல்லப்படுவார் எனறும் கூறியுள்ளார்.
அஸ்ஸாமின் நல்பாரி மாவட்டத்தின் போர்பக் பகுதியைச் சேர்ந்தவவர் லன்டு கிஷோர் சர்மா வயது 35. இவர் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடக்கும் என்று கூறி கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பலியாவார்
அந்த பதிவில், "பிரதமர் மோடி வரும் 2021ம் ஆணடு தேர்தல் பிரச்சாரத்திற்காக குவகாத்தி வரும் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். பிரதமர் மோடியை குறிவைத்து நடக்கப்போகும் இந்த தாக்குதலில் பிரதமர் மோடிக்கு பதில் அஸ்ஸாம் மாநிலதின் சுகாதாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஹிமண்டா பிஸ்வா சர்மா பலியாவார்.

வேலை கொடுத்தால் காப்பாற்றுகிறேன்
அமைச்சர் ஹிமண்டா பிஸ்வா சர்மாவின் உயிர் தற்போது என்னுடைய கையில் இருக்கிறது.அவர் எனக்கு நல்பாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வேலை போட்டுக்கொடுத்தால் இறந்து போவதில் இருந்து தப்பிக்க வைக்கிறேன்" என கூறியுள்ளார்.

போலீசார் கைது
இதையடுத்து நல்பரி காவல் நிலையத்தில் சனிக்கிழமை அன்று புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை ஏற்று போலீசார் லன்டு கிஷோர் சர்மா மீது வழக்கு பதிவு செய்ததுடன் ஞாயிற்றுக்கிமை அவரை தேடி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், எதிர்காலத்தையே மாற்றக்கூடிய ஜோதிடன் என்றும் தனக்கு வேலை மட்டும் கொடுத்தால் போதும் என்றும் கூறியிருக்கிறார்.

போலீஸ் அதிர்ச்சி
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை எச்சரித்ததுடன், இப்படியெல்லாம் போஸ்ட் போடக்கூடாது என கவுன்சிலிங் கொடுத்தனர். சமூக ஊடகங்களை ஆபத்தான, தவறான பழக்கவழக்கங்களுக்காகப் பயன்படுத்தும் நபர்களை அஸ்ஸாம் போலீசார் தடுத்து நிறுத்தி வருகிறோம். அதேநேரம் சமூக ஊடகங்களை விவேகமாக பயன்படுத்துவதற்கு இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறோம் என நல்பாரி மாவட்ட போலீஸ் எஸ்பி கவுர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
-
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications