For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியை குறிவைத்து தாக்குதல்.. அசார் அமைச்சர் இதில் பலியாவார்.. மிரட்டல் நபரை கைது செய்த போலீஸ்

Google Oneindia Tamil News

குவகாத்தி: பிரதமர் மோடி மீது வரும் 2021ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடக்கும் என்று கணித்தவரை அஸ்ஸாம் போலீசார் கைது செய்தனர்.

அவரது கணிப்பின்படி 2021ம் ஆணடு குவகாத்தியில் நடக்கும் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடக்கும் என்றும் அதில் அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கொல்லப்படுவார் எனறும் கூறியுள்ளார்.

அஸ்ஸாமின் நல்பாரி மாவட்டத்தின் போர்பக் பகுதியைச் சேர்ந்தவவர் லன்டு கிஷோர் சர்மா வயது 35. இவர் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடக்கும் என்று கூறி கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பலியாவார்

அமைச்சர் பலியாவார்

அந்த பதிவில், "பிரதமர் மோடி வரும் 2021ம் ஆணடு தேர்தல் பிரச்சாரத்திற்காக குவகாத்தி வரும் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். பிரதமர் மோடியை குறிவைத்து நடக்கப்போகும் இந்த தாக்குதலில் பிரதமர் மோடிக்கு பதில் அஸ்ஸாம் மாநிலதின் சுகாதாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஹிமண்டா பிஸ்வா சர்மா பலியாவார்.

வேலை கொடுத்தால் காப்பாற்றுகிறேன்

வேலை கொடுத்தால் காப்பாற்றுகிறேன்

அமைச்சர் ஹிமண்டா பிஸ்வா சர்மாவின் உயிர் தற்போது என்னுடைய கையில் இருக்கிறது.அவர் எனக்கு நல்பாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வேலை போட்டுக்கொடுத்தால் இறந்து போவதில் இருந்து தப்பிக்க வைக்கிறேன்" என கூறியுள்ளார்.

போலீசார் கைது

போலீசார் கைது

இதையடுத்து நல்பரி காவல் நிலையத்தில் சனிக்கிழமை அன்று புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை ஏற்று போலீசார் லன்டு கிஷோர் சர்மா மீது வழக்கு பதிவு செய்ததுடன் ஞாயிற்றுக்கிமை அவரை தேடி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், எதிர்காலத்தையே மாற்றக்கூடிய ஜோதிடன் என்றும் தனக்கு வேலை மட்டும் கொடுத்தால் போதும் என்றும் கூறியிருக்கிறார்.

போலீஸ் அதிர்ச்சி

போலீஸ் அதிர்ச்சி

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை எச்சரித்ததுடன், இப்படியெல்லாம் போஸ்ட் போடக்கூடாது என கவுன்சிலிங் கொடுத்தனர். சமூக ஊடகங்களை ஆபத்தான, தவறான பழக்கவழக்கங்களுக்காகப் பயன்படுத்தும் நபர்களை அஸ்ஸாம் போலீசார் தடுத்து நிறுத்தி வருகிறோம். அதேநேரம் சமூக ஊடகங்களை விவேகமாக பயன்படுத்துவதற்கு இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறோம் என நல்பாரி மாவட்ட போலீஸ் எஸ்பி கவுர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.

English summary
Assam man Lintu Kishore Sarmah arrested for ‘predicting’ terrorist attack on PM in a 2021 election rally in Guwahati
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X