ஸ்பெக்ட்ரம் ஏலம்: மத்திய அரசுக்கு ரூ1.10 லட்சம் கோடி வருவாய்! உச்சநீதிமன்றமும் தடையை நீக்கியது!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: செல்போன் சேவைகளுக்கான ஸ்பெக்டெரம் ஏலம் முடிவடைந்துள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெற்ற இந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலமாக மத்திய அரசுக்கு ரூ1.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஏலம் தொடர்பாக விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றமும் நேற்று நீக்கி உத்தரவிட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியது. ஏல முறை பின்பற்றப்பட்டிருந்தால் இழப்பீடு ஏற்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டியது.

Auction of telecom spectrum concludes after 19 days, garners over Rs 1 lakh crore

இதையடுத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை ரத்து செய்து ஏல முறையினை பின்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தினாலும் முடிவை உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த 4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 19 நாட்களாக நடந்த ஏலம் நேற்று முன் தினம் நிறைடைந்தது பெற்றது.

மொத்தம் 115 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஏலத்தின் முடிவில் மத்திய அரசுக்கு ரூ1.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி எர்டெல், வோடஃபோன் இண்டியா, டாடா டெலிசர்வீசஸ், யுனினார், ஐடியா செல்லுலார், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன.

உச்சநீதிமன்ற தடை நீக்கம்

இதனிடையே 2ஜி வழக்கில் முன்னர் உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக ஸ்பெக்ட்ரம் ஏலத்தை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்தது. இந்தத் தடையையும் உச்ச நீதிமன்றம் நேற்று நீக்கியது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.கே. பாண்ட் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்பெக்ட்ரம் ஏலம் மீதான முந்தைய தடை உத்தரவை நீதிபதிகள் நீக்கினர். கடந்த 19 நாட்களாக நடத்தப்பட்ட ஏலத்தை இறுதி செய்ய மத்திய அரசுக்கு அனுமதி அளித்தனர்.

இதன்மூலம் ஸ்பெக்ட்ரம் ஏலம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ள சட்டபூர்வமாக அனுமதி கிடைத்துள்ளது. இந்த ஏலத் தொகையால் அரசின் நிதிப் பற்றாக்குறை குறையும் எனக்கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+