26/11க்குப் பின் இந்தியா வந்த சிறுவன் 'மோஷே'.. மும்பையில் இஸ்ரேல் பிரதமரை சந்திக்கும் 'பீனிக்ஸ் பறவை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாளை மும்பை செல்ல இருக்கிறார். இதில் இஸ்ரேல் அதிபருடன் கலந்து கொள்ள 11 வயது சிறுவன் ஒருவனும் வந்து இருக்கிறான்.
Recommended Video

மும்பை: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாளை மும்பை செல்ல இருக்கிறார். நாளை மும்பையில் நடக்கும் 26/11 நினைவு தின நிகழ்வில் அவர் கலந்து கொள்கிறார்.
மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நாளை அங்கு நினைவு சதுக்கம் திறக்கப்பட உள்ளது. இதில் இஸ்ரேல் அதிபருடன் கலந்து கொள்ள 11 வயது சிறுவன் ஒருவனும் வந்து இருக்கிறான்.
மோஷே ஹோல்ட்ஸ்பெர்க் என்ற அந்த சிறுவனின் வருகை இஸ்ரேல் பிரதமரின் வருகையைவிட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாளை என்ன மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் என்று மக்கள் இப்போதே எதிர்ப்பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.

26/11
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவில் மிக மோசமான தாக்குதல் இது. இதில் பல இந்திய மக்களும் , வெளிநாட்டு பயணிகளும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இந்திய நாட்டிற்கே பெரும் அவமானாக இந்த தாக்குதல் பார்க்கப்பட்டது.

நினைவஞ்சலி
இந்த தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாளை மும்பை செல்ல இருக்கிறார். தற்போது அவர் 6 நாள் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். நாளை காலை மும்பை சென்று அவர் நினைவு சதுக்கத்தை திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

மோஷே
இந்த நிகழ்விற்கு இஸ்ரேலில் இருந்து சிறுவன் மோஷே அழைக்கப்பட்டு இருக்கிறான். இவன் 2 வயதாக இருந்த போது மும்பை தாக்குதலில் தன்னுடை தாய் தந்தையை இழந்தான். கோவாவில் வளர்ந்த இவன் அந்த தாக்குதலுக்கு பின் மீண்டும் இஸ்ரேலுக்கு சென்றுவிட்டான். இந்தியாவில் இவனுக்கு உதவியாக இருந்த சான்ட்ரா சாமுவேல் என்பவரின் பராமரிப்பில் தற்போது அங்கு வாழ்ந்து வருகிறான்.

மீண்டும் மும்பை
தற்போது 10 ஆண்டுகள் கழித்து அந்த சிறுவன் மீண்டும் மும்பைக்கு வந்து இருக்கிறான். நாளை நடக்கும் நிகழ்வில் இஸ்ரேல் பிரதமருடன் அவனும் கலந்து கொள்ள இருக்கிறான். நாளை அவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவார்கள். மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இன்னும் சிலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

வாழ ஆசை
மும்பையை பார்க்க வேண்டும், அங்கு ஒருநாளாவது வாழ வேண்டும் என்று இந்த சிறுவன் பேசி இருக்கிறான். மேலும் இந்திய பிரதமர் மோடியிடமும் அவன் அதே விஷயத்தை கூறியுள்ளான். அதேபோல் அவன் வாழந்த கோவா வீட்டையும் பார்க்க ஆசை தெரிவித்துள்ளான்.
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications