சிறுமி பலாத்காரத்தால் மூடப்பட்ட பெங்களூர் பள்ளி பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திறப்பு
பெங்களூர்: ஆறுவயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் 11 நாட்களாக மூடப்பட்டிருந்த பெங்களூர் தனியார் பள்ளி இன்று திறக்கப்பட்டது.
பெங்களூர் மாரத்தஹள்ளியில் உள்ள முன்னணி தனியார் பள்ளியில் ஆறுவயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பிற மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், குற்றவாளி கைது செய்யப்படும் முன்பாக, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று அறிவித்தனர்.
பெற்றோர்கள் போராட்டத்தால் ஜூலை 17ம்தேதி முதல் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது.

இந்நிலையில், பள்ளியின் ஸ்கேட்டிங் ஆசிரியர் முஸ்தபா என்பவரை கடந்த 20ம்தேதி, பெங்களூர் போலீசார் கைது செய்தனர். அவரது லேப்டாப்பில் இருந்து சிறுமிகள் பலரின் நிர்வாண படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே பணியாற்றிய பள்ளியிலும் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்ததாக முஸ்தபா மீது போலீசார் குற்றம்சாட்டினர்.
பாலியல் பலாத்கார சம்பவங்கள் பெங்களூரில் பெருகிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டால், பெங்களூர் போலீஸ் கமிஷனராக இருந்த ராகவேந்திர அவுராத்கர், ஜூலை 21ம்தேதி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு எம்.என்.ரெட்டி போலீஸ் கமிஷனராக்கப்பட்டார்.
இதன்பிறகு வழக்கில் வேகம் பிடித்தது. பள்ளியின் நிறுவனர் ருஸ்டம் கேரவாலா போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் ஜூலை 22ம் தேதி கைது செய்யப்பட்டார். அடுத்தநாளே நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.
ஜூலை 25ம்தேதி பெங்களூர் போலீசார் அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளை அனுப்பினர். அதில் பள்ளிகளில், வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது உட்பட பல அம்ச நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் இறுதிக்குள் இந்த நிபந்தனைகளை பள்ளிகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதையடுத்து பெற்றோர்களுடன் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 5 முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை, புதன்கிழமை திறக்கப்படும்.
பள்ளி திறக்கப்பட்ட நாளன்று மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் பள்ளிக்கு வந்திருந்தனர். பள்ளி வளாகம் பாதுகாப்பாக உள்ளதா என்பதை நேரில் பார்வையிட வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே பள்ளியில் தற்போது கூடுதலாக கண்காணிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பலாத்காரத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியையும் கைது செய்ய வேண்டும் என்று சில பெற்றோர் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications