பாஜகவினரிடம் சற்று எச்சரிக்கையாகவே இருங்கள் - மாயாவதி எச்சரிக்கை
லக்னோ: பா.ஜ.க.விடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று தனது கட்சியினரை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எச்சரித்து உள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில, மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம், லக்னோவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாயாவதி பேசியதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு அனைத்து விதமாக இழிவான உத்திகளையும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடும்.
அதனால், எதிர்க்கட்சிகளிடம் இருந்து குறிப்பாக பா.ஜ.க மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் மத ரீதியிலான தூண்டல்களில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க.வால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தால், அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பலனளிப்பதாக இருக்கும். ஆனால், அந்த மாநிலத்துக்கு அது மிகப்பெரிய இழப்புக்கு காரணமாகிவிடும்.
அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், பா.ஜ.க.வால் பீகாரில் ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது. மேலும், தேர்தல் முடிவுகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு திருப்தியளிக்கும் விதமாகவும் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications