ஆந்திராவை பிரிப்பதால் புதுவையின் ஏனாம் பகுதிக்கு பாதிப்பு!
ஏனாம்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதால் அங்குள்ள புதுவை மாநில பிரதேசமான ஏனாமும் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் ஆட்சியாளர்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஏனாம் பகுதிக்கு 30 மில்லியன் கன அடி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து ஒப்பந்தப்படி அம்மாநில அரசு நீரை வழங்கி வருகிறது.

தற்போது ஆந்திரத்தை, தெலுங்கானா மற்றும் சீமாந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் கோதாவரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் பிரச்னை எழுந்துள்ளது.
சீமாந்திரா மாநிலமே, கோதாவரி தண்ணீருக்காக தெலுங்கானாவை நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. தற்போது சீமாந்திரா நிர்வாகத்தினர் பிரிட்டிஷ் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பின்பற்றுவார்களா என ஏனாம் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
புதுவை மாநில அரசு ஏனாம் பகுதி மக்களின் உரிமை, பாதுகாப்பை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications