"மோடி" என்கிற ஆக்சிஜனால் மட்டுமே உயிருடன் இருக்கிறது பா.ஜ.க... சொல்வது சிவசேனா
மும்பை: நரேந்திர மோடி என்ற ஆக்சிஜன் இருக்கும் வரைதான் பாரதிய ஜனதா கட்சியின் உயிர் இருக்கும் என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வமான ஏடான சாம்னா கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரை:
ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. மோடி எனும் ஆக்சிஜனை பெற்றிருக்கிறது. மக்களிடம் புகழ் இருக்கும் வரை மட்டுமே இந்த ஆக்ஸிஜன் நீடிக்கும்.
ஆனால், சிவசேனா தன்னுடைய எண்ணங்களிலும், போராட்டத்திலும், நாட்டுப்பற்றிலும் என்றும் மாறாது நிற்கும். இந்துத்துவா, நாட்டுப்பற்று, மகாராஷ்டிராவில் அடையாளம் உள்ளிட்டவற்றில் ஒருபோதும் எங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவே மாட்டோம்.
எங்கள் நம்பிக்கையில் இருந்து ஒருபோதும் தடுமாற மாட்டோம். இந்திய நாட்டின் எதிரிகளுக்கு எதிராக சிவசேனா போரை துவங்கியிருக்கிறது.
சிவசேனாவுக்கு யாராலும் எந்த பிரச்சனையும் இல்லை. மக்கள் அளிக்கும் ஆதரவே எதிர்காலத்தில் எங்களை மகாராஷ்டிராவில் நிலைநிறுத்த போகிறது. எதிர்காலம் சிவசேனாவுக்கே.
இவ்வாறு சாம்னா கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.