மோடி முத்திரை இல்லாமல் போனால் குஜராத்திலும் பாஜக மண்ணைத்தான் கவ்வும்!
நரேந்திர மோடி எனும் பிராண்டட் இல்லாமல் போனால் குஜராத்திலும் பாஜக மண்ணைத்தான் கவ்வும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி எனும் பிராண்ட் இல்லாமல் போனால் குஜராத்திலும் பாஜக மண்ணைத்தான் கவ்வும் என்பதைத்தான் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் கருத்து கணிப்பின் விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
குஜராத் சட்டசபை தேர்தல்கள் டிசம்பர் 9,14 தேதிகளில் நடைபெற உள்ளன. டிசம்பர் 18-ந் தேதியன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.
குஜராத் தேர்தல் முடிவுகள் எப்படியாக இருக்கும் என்பது தொடர்பான கருத்து கணிப்புகள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்று டைம்ஸ் நவ்-விஎம்ஆர் இணைந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டன.

பாஜக முகம் மோடிதான்
இதில், பிரதமர் மோடி மண்ணின் மைந்தர் என்பதற்காகவே பாஜகவை ஆதரிப்பதாக 81% பேர் கூறியுள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலில் மோடி மண்ணின் மைந்தர் என்பதற்காக ஆதரித்தவர்கள் 60% பேர்தான்.

குஜராத் முதல்வரா மோடி?
அதேபோல் என்னதான் பிரதமர் பதவியில் மோடி அமர்ந்திருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தின் சிறந்த முதல்வராக 67% மோடியைத்தான் கருதுகின்றனர். ஆக பிரதமர் பதவியில் மோடி இருந்த போதும் குஜராத் மக்கள் நலன் குறித்து மட்டுமே மோடி அக்கறை கொள்வதை அம்மாநில மக்கள் உணர்ந்துள்ளனர்.

மோடி இல்லையெனில்..
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரசியல் பார்வையாளர்கள், பொதுவாக மாநிலங்களில் நீண்ட காலம் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால் ஆட்சிக்கு எதிராகவே மக்கல் வாக்களிப்பார்கள். ஆனால் குஜராத்தில் தொடர்ந்து பாஜக வெல்வதற்கு காரணம் நரேந்திர மோடி எனும் முத்திரைதான்.

பாஜக தோற்கும்
பிரதமர் நரேந்திர மோடி என்கிற பிராண்டட் முத்திரை இல்லாமல் இருந்தால் நிச்சயம் குஜராத்திலும் பாஜக மண்ணைத்தான் கவ்வும். இதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை என்றே வாதிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications