ராணுவ வீரர்களுக்கான துப்பாக்கிகள், தோட்டாக்கள், பூட்ஸ்களுக்கு பற்றாக்குறை அதிர்ச்சி தகவல்!
டெல்லி: காஷ்மீரில் உள்ள உறை பனி மலையான சியாச்சின் சிகரம், லே போன்ற பனிமலைப்பிரதேசங்களில் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு அடிப்படை தேவையான துப்பாக்கிகள், தோட்டாக்கள், புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் மற்றும் பூட்ஸ்கள் போன்றவை போதுமான அளவில் சப்ளை செய்யப்படாததால் பற்றாக்குறை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவின் மேஜர் ஜெனரல் பி.சி. கந்தூரி தலைமையிலான நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் சேர்ந்த 33 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்புத் துறைக்கான நிலைக் குழு , பாதுகாப்புத் துறையில் காணப்படும் குளறுபடிகள் மற்றும் பிரச்னைகளை வெளிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில், ராணுவத்தின் தயார் நிலை குறித்த தனது மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதனை அக்குழு தாக்கல் செய்துள்ளது.
அதில் இடம்பெற்றுள்ளதாவது:
சியாச்சின் மற்றும் லே ஆகிய மிக உயரமான பனி சிகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு ஏறக்குறைய 2 லட்சம் ஜோடி தோல் பூட்ஸ்கள், 13 லட்சத்திற்கும் அதிகமான கேன்வாஸ் பூட்ஸ்கள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொசு வலைகள் தேவையாக உள்ளன. மேலும் முகத்தை எப்போதும் கதகதப்பாக வைத்துக்கொள்வதற்கு சுமார் 65,000 முக உறைகள் தேவையாக உள்ளது. இவற்றை எதிர்பார்த்து அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த பனி சிகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களில் எத்தனை பேருக்கு புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் தேவைப்படுகின்றன என்ற விவரத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் தர இயலவில்லை. மிக முக்கியமான உயிர் காக்கும் உபகரணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வாங்காததால், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களின் உயிர் ஆபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.
இருட்டில் பார்க்கக்கூடிய கண்ணாடிகள் ஏராளமாக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகின்றபோதிலும், ராணுவ தரப்பிலோ இந்த இரவு கண்ணாடிகளின் தேவை அதிகம் உள்ளதாக மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளது. இது ராணுவத்தின் நம்பிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சகம் பெறவில்லை என்றே எண்ண வைக்கிறது.
ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் போன்றவற்றிற்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, ஒரு நீண்ட கால போரை நாடு தாங்கி நிற்கும் சாத்தியமில்லாததையே காட்டுகிறது.
ராணுவத்திற்கான தொழில் நுட்பங்களை ஆராய்ச்சி செய்து வழங்குவதற்காக அமைக்கப்பட்ட டிஆர்டிஓ அமைப்பு, ராணுவத்திற்கென உள்ள உலகத்தரத்துடன் ஏற்கத்தக்க அம்சங்களுடன் கூடிய ரைஃபிளை உருவாக்கி அளிக்க கடந்த 1982 ஆம் ஆண்டிலிருந்தே தவறிவிட்டது.
ஆண்டுகள் பல ஆகிவிட்டபோதிலும் டிஆர்டிஓ நிபுணர்களால் உலகம் தரம் வாய்ந்த ஒரு ரைஃபிளை உருவாக்க இயவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications