யு.எஸ்.சிலிருந்து திருமணத்திற்கு வந்த புதுப்பெண் கேரள விமான நிலையத்தில் கடத்தல்- மூவர் கைது
கொழிஞ்சாம்பாறை: அமெரிக்காவில் இருந்து திருமணத்திற்காக கேரள விமான நிலையம் வந்த இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பட்டனம்திப்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண் குடும்பத்துடன் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் சென்னையை சேர்ந்த வாலிபருக்கும் வருகிற 13 ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்காக இளம்பெண் தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் கேரளா திரும்பினர்.

நெடும்பாஞ்சேரி சர்வதேச விமான நிலைம் வந்து இறங்கினர். பின்பு அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். வீடு செல்வதற்காக கால் டாக்சி நிறுத்தும் இடத்துக்கு சென்றனர். திடீரென 3 கார்கள் அங்கு வந்தன. கண் இமைக்கும் நேரத்தில் ஒரு காரை விட்டு இறங்கிய வாலிபர் புதுப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் குண்டுக்கட்டாக தூக்கி ஏற்றினார். பின்பு 3 கார்களும் அணிவகுத்து மின்னல் வேகத்தில் சென்றன. நொடிபொழுதில் நடந்து இந்த சம்பவத்தால் மணப்பெண்ணின் பெற்றோர் என்ன செய்வதென்று திகைத்து நின்றனர்.
இது குறித்து அங்கிருந்த போலீசில் புதுப்பெண்ணின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் புதுப்பெண் கடத்தல் குறித்து மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் குறிப்பிட்ட கார்களை கண்டு பிடிக்க முடியவில்லை. புதுப்பெண் குடும்பத்துடன் விமானத்தில் பயணம் செய்த சிம்சன் என்ற வாலிபர் பெண்ணை கடத்தியபோது பார்த்ததாகவும், ஒரு காரின் எண் தனக்கு தெரியும் என்று போலீசில் கூறினார். குறிப்பிட்ட கார் எண்ணை வைத்து தேடுதல் வேட்டை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதனையடுத்து 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கார்களை சல்லடைபோட்டு தேடினர்.
இது குறித்து அறிந்த மணப்பெண்ணை கடத்தியவர்கள் பதுங்கினர். கார் எண்ணை ஆர்.டி.ஓ.விடம் கொடுத்து முகவரியை போலீசார் பெற்றனர். போலீசார் தங்களை நெருங்கி விட்டதை அறிந்த கடத்தல்காரர்கள் புதுப்பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டனர். அங்கு தீவிர தேடுதல் பணியில் இருந்த நெடும்பாஞ்சேரி டி.எஸ்.பி. சம்ஸ் தலைமையிலான போலீசார் கடத்தல்காரர்களின் கார்களை மடிக்கிப்பிடித்தனர். நடுரோட்டில் தவித்த புதுப்பெண்ணையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 கடத்தல்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சாலக்குடியை சேர்ந்த மார்ட்டின், ஜான் மற்றும்இரிஞாலகுடாவை சேர்ந்த அபின் ஆகியோர் என்பதும், மார்ட்டின் என்பவர்தான் புதுப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் தூக்கிப்போட்டு கடத்தினார் என்பதும் தெரியவந்தது. 3 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் புதுப்பெண் கடத்தியது குறித்து 3 பேர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications