பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 9 பேர் பலி… மத்திய பிரதேசத்தில் சோகம்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் இந்த பேருந்தில் பயணம் செய்த 24 பேரில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்

Bus falls into river, 9 killed

தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 9 பேரில் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மற்ற உயிர் சேதம் குறித்த தகவல் எதுவும் இல்லை. காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து ஏன் நடைபெற்றது என்பதற்கான காரணத்தை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+