ஓடும் காரில் திடீர் தீ – காரை ஓட்டியவர் உயிர் தப்பினார்... டெல்லியில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் 12 ஆவது செக்டார் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.
ராவ் மவுரியார் என்பவர் ஓட்டிச் சென்ற காரில் தீப்பற்றியதை மற்றொரு காரில் சென்றவர் பார்த்தார். அதுகுறித்து ராவ் மவுரியாரிடம் தெரிவித்தார்.
மேலும், உடனடியாக காரை விட்டு ராவ் மரியார் இறங்க அவர் உதவி செய்தார். தீ பற்றி எரிந்தது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த சாலையில் வேறு வாகனங்கள் செல்லாதவாறு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீப்பற்றிய கார் முற்றிலும் எரிந்து நாசமானது.












Click it and Unblock the Notifications