சமூக விரோதி என்று கூறிய ரஜினிகாந்த் மீது வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் மனு
சமூக விரோதி என்று கூறிய ரஜினி மீது வழக்குப் பதியக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
Recommended Video
டெல்லி: தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதி என்று கூறிய ரஜினிகாந்த் மீது வழக்கு பதிய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கொடூரமான காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.
இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். இன்னும் 60 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் சென்று பார்த்தார். இந்த நிலையில் தூத்துக்குடி சம்பவம் குறித்து பேட்டியளித்த அவர், தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள்தான் என்றார். சமூக விரோதிகளை தமிழக போலீஸ் அடக்க வேண்டும் என்றார்.
ரஜினியின் இந்த பேச்சிற்கு தமிழகம் முழுக்க எதிர்ப்பு வந்தது. தற்போது சமூக விரோதி என்ற ரஜினிகாந்த் மீது வழக்கு பதிய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஓசூரை சேர்ந்த சிலம்பரசன் ரஜினிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என ரஜினி கூறியது மக்களை அசிங்கப்படுத்தும் செயல், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளார்.