சைபர் குற்றவாளிகளுக்கு செக்...ஐபோனை உளவு பார்க்க ஆய்வு கூடம் அமைக்கிறது சிபிஐ!
டெல்லி: இந்தியாவில் ஆப்பிள் ஐபோனை வைத்து செய்யப்படும் குற்றச்செயல்களை கண்டுபிடித்து தடுக்க சிபிஐ புதிய ஆய்வு கூடம் அமைக்க உள்ளது.
இந்தியாவில் ஐபோன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வவருகிறது. அதற்கேற்ப போன் மூலமான குற்றச்செயல்களும் கூடி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் போலீசார் கைது செய்த கிரிமினல்களிடமிருந்து10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதே, இதற்கு சாட்சி.

குற்றங்கள் அதிகரிப்பு
கிரிமினல்கள் கைகளிலும் ஐபோன் அசுர வேகத்தில் புழங்க ஆரம்பித்துள்ளதால், அதன்மூலம் செய்யப்படும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.

ஆப்பிள் தயாரிப்புகள்
ஐபோன்கள் மற்றும் ஐபேட் போன்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை, கிரிமினல்களிடமிருந்து பறிமுதல் செய்ய நேரிட்டால், பிறகு அதிலுள்ள விவரங்களை எடுக்க வெளிநாடுகளுக்கு அவற்றை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய போலீசாரும், சிபிஐயும் தற்போது உள்ளது.

ஆய்வு நிலையம்
இதை சரி செய்ய, இந்தியாவிலேயே, ஐபோன் ஆய்வு கூடத்தை திறக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சிபிஐ அகாடமியில், நவீன தொழில்நுட்பம் மற்றும் சாப்ட்வேர் வசதிகளுடன் இந்த ஆய்வு கூடம் அமைய உள்ளது. இதன்மூலம், ஐபோனில் உள்ள விவரங்களை எளிதாக டிரேஸ் செய்யலாம்.

சைபர் குற்றங்கள்
பொருளாதார குற்றங்கள், சைபர் குற்றங்களை கண்டறிந்து சரி செய்ய இந்த ஆய்வு கூடம் உதவும் என்று சிபிஐ வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications