யாரையும் சிறைபிடிக்கவில்லை.. தவறு முழுக்க இந்தியாவின் பக்கம்தான்.. தொடர்ந்து சீண்டும் சீனா!
லடாக்: நாங்கள் இந்திய வீரர்கள் யாரையும் லடாக் சண்டையின் போது கைது செய்யவில்லை என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனை மிக தீவிரமாக மாறி வருகிறது. சீனா தொடர்ந்து இதில் இந்தியாவை சீண்டி வருகிறது. லாடாக்கில் நடந்த சண்டைக்கு இந்தியாதான் காரணம் என்று சீனா கூறி வருகிறது.
லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் நடந்த சண்டைக்கு பின் இரண்டு நாட்டு பிரச்சனை பெரிதாகி உள்ளது . அங்கு கடந்த 15-16 தேதிகளில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
லடாக் தொடக்கம்தான்.. எங்களுக்கு நடந்ததுதான் இந்தியாவிற்கும் நடக்கும்.. எச்சரிக்கும் திபெத் தலைவர்
என்ன பேட்டி
இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கல்வான் சண்டை நடக்க முழுக்க முழுக்க இந்தியாதான் காரணம், அதில் நாங்கள் எதுவும் செய்யவில்லை. கல்வான் பகுதியில் நடந்தது சரியோ தவறோ. அதை பற்றி பேச வேண்டியது இல்லை. ஆனால் இதற்கு பொறுப்பு முழுக்க முழுக்க இந்தியாதான்.
யார் காரணம்
இந்தியாவின் பக்கமே தவறு இருக்கிறது. இதை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும். நாங்கள் இப்போது பேசி வருகிறோம். பிரச்சனையை சரி செய்வதற்காக இரண்டு தரப்பும் பேசி வருகிறது. பிரச்சனையை சுமுகமாக தீர்க்கவே இரண்டு நாட்டு தரப்பும் முயன்று வருகிறது. நாங்கள் இந்தியர்கள் யாரையும் சண்டையின் போது கைது செய்யவில்லை.
விடுதலை இல்லை
இந்திய வீரர்கள் யாரும் எங்கள் நாட்டில் இன்னும் சிறை பிடிக்கப்படவில்லை, என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக லடாக் சண்டையின் போது இந்திய வீரர்கள் காயம் அடைந்தது மட்டுமின்றி 10 இந்திய ராணுவ வீரர்களை சீன ராணுவம் சிறைபிடித்தது என்று செய்திகள் வெளியானது.
முகாம் அழைத்து சென்றனர்
இவர்களை கட்டிப்போட்டு சீன ராணுவம் தங்களது முகாமிற்கு அழைத்து சென்றது. நேற்று இரண்டு நாட்டு ராணுவத்தின் மேஜர் ஜெனரல்கள் இடையே பேச்சுவார்த்தைக்கு பின் இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்று செய்தி வெளியானது. தற்போது சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.