7 தமிழர் விடுதலை விவகாரம்: லோக்சபாவில் காங்கிரஸ்- அதிமுக மோதல்!!
டெல்லி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு லோக்சபாவில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு அதிமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் 2-ந் தேதியன்று, குற்றவியல் சட்டம் 435-ன் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவை; அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் படி மாநில அரசு 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்தது.

இதனால் 7 தமிழரையும் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் குற்றவியல் சட்டம் 435-வது பிரிவின் கீழ் கருத்தை கோருவதாகவும் நேற்று மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒரு கடிதத்தை அனுப்பியது.
தமிழக அரசின் இந்த முடிவை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக அரசின் இம்முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் லோக்சபா, ராஜ்யசபாவில் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை லோக்சபா கூடியதும், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த விவகாரத்தை எழுப்பினார். ஆனால் அதிமுக எம்பிக்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து காங்கிரஸுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
உடனே குறுக்கிட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, கேள்வி நேரத்துக்குப் பின்னர் இந்த விவகாரம் குறித்து பேசலாம் என்றார். பின்னர் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் சுருக்கமாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் என்றார்.
அப்போது பேசிய கார்கே, ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யவே கூடாது; 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் கடிதத்தை மத்திய அரசு பரிசீலிக்கவே கூடாது; இது குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் தர வேண்டும் என்றார். பின்னர் சபை நடவடிக்கைகள் வழக்கம் போல நடைபெற்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications