தேர்தல் வந்தால் மட்டுமே காங்கிரசுக்கு ஏழைகள் மீது அக்கறை வரும்: மோடி
கோரக்பூர்: தேர்தல் வந்தால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஏழைகள் மீது அக்கறை வரும் என்று பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம், கோராக்பூரில் நடந்த பா.ஜ.க பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது,''நாடு முழுவதும் பா.ஜ.க. அலை வீசுகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகப்போகிறது. இதற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களே சாட்சியாக உள்ளது. காங்கிரசின் தவறான கொள்கையால் நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் ஏழைகள் அதிகாரத்திற்கு வருவதை ஏற்று கொள்ளாது. ஆனால், தற்போது ஏழைகள் குறித்து பேசி வருகிறது. தேர்தல் வந்தால் மட்டுமே ஏழைகள் குறித்து காங்கிரசுக்கு ஞாபகம் வரும். ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து டீ விற்ற ஒருவன் தலைவராக வருவதை காங்கிரசால் ஏற்று கொள்ள முடியவில்லை.
குஜராத் பெரும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாகியுள்ளது. இங்கு அனைவரும் 24 மணி நேரமும் மின்சாரம் பெற்று வருகின்றனர். இங்கு கடந்த 10 ஆண்டுகளாக மோதல்கள் எதுவும் இல்லை. உ.பி.யில் விவசாயத்திற்கு தேவையான உரங்களை கள்ளச்சந்தையில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. குஜராத்தை போல உ.பி.யை உருவாக்க சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் தவறி விட்டது'', என இவ்வாறு அவர் பேசினார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications