இந்திராணியை போலீஸார் அடித்தார்கள்... வக்கீல்கள் பரபரப்பு புகார்
மும்பை: மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியை, போலீஸார் அடித்து சித்திரவதை செய்ததாக அவரது வக்கீல்கள் கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று இந்திராணியை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது இதுகுறித்து அவரது வக்கீல்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவுள்ளனராம்.
தனது மகள் ஷீனா போராவைக் கொலை செய்த வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையைச் செய்தது இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குட்டு வெளிப்பட உதவிய இந்திராணியின் டிரைவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தன. இந்த வழக்கில் இதுவரை கார் டிரைவர், இந்திராணி, சஞ்சீவ் கன்னா, ஷீனாவின் தம்பியான மிக்கயில் போரா, ஷீனா காதலித்து வந்த ராகுல் முகர்ஜி ஆகியோரை போலீஸார் விசாரித்துள்ளனர்.
2012ம் ஆண்டு ஷீனா போரா கொலை செய்யப்பட்டு அவரது உடலை எரித்து காட்டில் போட்டு விட்டனர்.