Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா வைரஸ் தடுப்பூசி: குழந்தைகளில் யாருக்கெல்லாம் போடலாம்? உலக நாடுகளின் நிலை என்ன?

Subscribe to Oneindia Tamil
Coronavirus vaccine: Can Children take vaccines? What world countries are doing?
Getty Images
Coronavirus vaccine: Can Children take vaccines? What world countries are doing?

16 - 17 வயதுள்ள எல்லா குழந்தைகளுக்கும் பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் 12 - 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

12 - 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து, ஓர் அறிக்கை தயார் செய்யுமாறு இங்கிலாந்தில் இருக்கும் தேசிய பொது சுகாதார சேவை அமைப்பிடம் கூறப்பட்டது.

யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி?

16 - 17 வயதுள்ள எல்லா குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் டோஸ் குறித்து இன்னும் எதுவும் திட்டமிடவில்லை.

கடுமையான நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் (இதில் செரிப்ரல் பால்சி, ஆட்டிசம் அல்லது எபிலிப்சி போன்றவைகளும் அடக்கம்) டவுன் சிண்ட்ரோம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், நோயெதிர்ப்பு மண்டலம் மோசமாக பலவீனமடைந்து இருப்பவர்கள், புற்றுநோய் உள்ள குழந்தைகளும் அடக்கம்.

பல்வேறு கற்றல் குறைபாடு உள்ளவர்கள் போன்ற மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளால் அபாய நிலையில் உள்ள 12 - 15 வயதான குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.

ஒத்த வயதுள்ள, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்களோடு வாழும் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

எந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது?

கொரோனா தடுப்பூசி
Getty Images
கொரோனா தடுப்பூசி

தற்போது ஃபைசர் தடுப்பூசி தான் வழங்கப்படுகிறது. மாடர்னா தடுப்பூசியும் குழந்தைகளுக்குச் செலுத்த பிரிட்டனில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா?

எந்த ஒரு மருந்தும் முழுமையாக பாதுகாப்பானது அல்ல. எல்லா மருந்துகளும் ஆபத்துகளும் நன்மைகளும் கொண்டதே.

ஃபைசர் தடுப்பூசி பாதுகாப்பானதாக இல்லை எனில் அதை பிரிட்டன் பயன்பாட்டுக்கு அனுமதித்திருக்காது.

ஃபைசர் தடுப்பூசியால் மிக அரிதாகவே இதய தசைகளில் அழற்சிகள் ஏற்படுகின்றன. இது இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்களுக்கு மத்தியில் பொதுவாக காணப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மருந்துகளை ஆய்வு செய்து அனுமதிக்கும், ஐரோப்பிய மருந்துவ முகமையோ, ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 10 லட்சம் பேரில் ஒன்று அல்லது இருவருக்கே இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறுகிறது. அப்படி பாதிக்கப்படுபவர்களும் முழுமையாக உடல் நலம் தேறிவிடுவதாகக் கூறியுள்ளது.

பிரிட்டனில் இருக்கும் எல்லா குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுமா?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஓர் இளம்பெண்
Getty Images
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஓர் இளம்பெண்

12 - 15 வயதுக்கு உட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தத் தேவையான பணிகளைச் செய்யுமாறு இங்கிலாந்தில் இருக்கும் தேசிய சுகாதார சேவை அமைப்பிடம் கூறப்பட்டது. ஆனால் இதுவரை தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழுவில் இருக்கும் நிபுணர்களின் பரிந்துரைகளைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

நல்ல உடல் நலத்தோடு இருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிக பலன் இல்லை என முன்பே கூறப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. காரணம், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் மிக மோசமான நோயால் பாதிக்கப்படுகிறார்கள் அல்லது இறக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால், பெரியவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளும் தெளிவில்லாமல் இருக்கிறது. காரணம் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடியவர்களில் பலருக்கும் ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.

பிரிட்டனில் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதுவரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

மற்ற நாடுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

கொரோனா வைரஸ்
Getty Images
கொரோனா வைரஸ்

கனடா மற்றும் பிரேசில் உட்பட பல நாடுகளும், 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தீர்மானித்துள்ளது.

16 - 25 வயதுள்ளவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைப் போன்றே 12 - 15 வயதுள்ளவர்களுக்கும் மாற்றங்கள் ஏற்படுவதாக ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதால், கடந்த மே மாதமே ஐரோப்பிய யூனியன் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் செலுத்த ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கும் தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் ஏற்கனவே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தத் தொடங்கிவிட்டன.

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அமெரிக்கா பரிந்துரைக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு ஐ.எம்.எஸ் என்கிற அரிதான, ஆனால் ஆபத்தான நோயால் பாதிக்கப்படுவதைக் காரணமாகக் காட்டுகிறது அமெரிக்கா.

சீனாவில் வரும் அக்டோபர் மாதத்துக்குள் 12 - 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரு தடுப்பூசிகளும் ஆறு மாத குழந்தைக்குச் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் எத்தனை குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்?

கொரோனா வைரஸ்
Getty Images
கொரோனா வைரஸ்

கிட்டத்தட்ட எல்லா குழந்தைகள் மற்றும் இளைஞர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு தான்.

கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, இங்கிலாந்தில் முதல் 12 மாதங்களில் 25 குழந்தைகள் மட்டுமே இறந்திருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

அப்படி இறந்தவர்களில் பலருக்கும், மிக கடுமையான உடல் நலக் கோளாறுகள் இருந்ததாகவும், சிக்கலான நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாகவும் கூறுகிறது தரவுகள்.

இறந்தவர்களில் ஆறு பேருக்கு மட்டுமே எந்த வித உடல் நலக் கோளாறுகளும் இருந்ததாக பதிவுகள் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+