மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பார் ஊழல் வழக்கு: கேரள முன்னாள் நிதி அமைச்சர் கிலி
திருவனந்தபுரம்: கேரளாவில் பார் ஊழல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளதால் முன்னாள் நிதி அமைச்சர் கலக்கத்தில் உள்ளார்.
கேரளாவில் கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் நிதி அமைச்சராக இருந்தவர் கே. எம். மணி. இவருக்கு மூடப்பட்ட மது பார்களை திறப்பதற்காக ரூ.1 கோடி லஞ்சம் கொடுத்தாக கேரள மது பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் பிஜி ரமேஷ் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து கே.எம். மணி
மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விஜிலென்ஸ் ஏடிஜிபி சங்கர் ரெட்டி, கே.எம். மணி பணம் வாங்கியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் கடந்த வருடம் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில் மது பார் ஊழல் வழக்கில் முன்னாள் ஏடிஜிபி சங்கர்ரெட்டி குளறுபடி
செய்துள்ளார். எனவே இது தொடர்பாக மறு விசாரணை நடத்த வேண்டும் என விஜிலென்ஸ் எஸ்பி சுதேசன் திருவனந்தபுரம் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதை பரீசிலனை செய்த விஜிலென்ஸ் நீதிமன்றம் கே.எம். மணி மீதான மது பார் ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு இழுத்தடிப்பால் ரிலாக்சாக இருந்த முன்னாள நிதி அமைச்சர் மணி
நீதிமன்ற மறு விசாரணை உத்தரவால் கிலியில் உறைந்து போய் காணப்படுகிறார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications