கொரோனா நோயாளிகளுக்கு கோமியம் கொடுத்து சிகிச்சை.. குஜராத்தில் கோசாலையில் திறக்கப்பட்ட தடுப்பு மையம்
காந்தி: குஜராத்திலுள்ள ஒரு கிராமத்தில் கொரோனா நோயாளிகளுக்குப் பசு கோமியம் மற்றும் பாலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் போலவே குஜராத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கிரமங்களில் கண்டறியப்படும் கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்த அங்கேயே தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், வடக்கு குஜராத்திலுள்ள டெடோடா என்ற கிராமத்தில் கோசாலையில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்குப் பசு பால், நெய் மற்றும் கோமியத்திலிருந்து செய்யப்பட்ட ஆயுர்வேத மருந்து தரப்படுவதாகக் கோசாலை அறங்காவலர் மோகன் ஜாதவ் தெரிவித்தார்.
லேசான கொரோனா பாதிப்பு உடையவர்களுக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நோயாளிகளுக்கு முக்கியமாகப் பசுவின் கோமியம் மற்றும் சில மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தப் பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கோசாலையில் அமைந்துள்ள இந்த கொரோனா தடுப்பு மையத்தில் தற்போது ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க இரண்டு ஆயுர்வேத மருத்துவர்களும் இரு எம்பிபிஎஸ் மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications