அப்துல்கலாம் ஒரு "ராஷ்டிர ரத்னா'.. பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
டெல்லி: நாட்டின் ராஷ்டிரபதியாவதற்கு முன் 'ராஷ்டிர ரத்னாவாக' திகழ்ந்தவர் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லியில் அப்துல் கலாமின் 84வது பிறந்த நாளையொட்டி டி.ஆர்.டி.ஓ. வளாகத்தில் அவரது சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, 2002ஆம் ஆண்டு நாட்டின் ராஷ்டிரபதியாக (ஜனாதிபதி) அப்துல் கலாம் பதவியேற்றார்.
அதற்கு முன்னர் ராஷ்டிர ரத்னாவாக (தேசத்தின் ரத்னமாக)அவர் திகழ்ந்தார். அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் நினைவிடம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கலாமைப் பொறுத்தவரை சவால்களைத்தான் அதிகம் நேசித்தவராக இருந்தார் என்றார்.
முன்னதாக தமது ட்விட்டர் பக்கத்திலும் அப்துல் கலாமுக்கு புகழாரம் சூட்டி பதிவு செய்திருந்தார் பிரதமர் மோடி. அப்துல்கலாமுக்குள் இருந்த குழந்தைத் தனத்தை அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.