இறப்பதற்கு முன்பு சாப்ட்டுருப்பா... பதன்கோட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியிடம் கூறிய தாய்

Subscribe to Oneindia Tamil

பதன்கோட்: இறக்கும் முன்பு சாப்பிடு மகனே என்று பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரிடம் அவரது தாய் பாகிஸ்தானில் இருந்து செல்போன் மூலம் கூறியது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இருக்கும் விமானப்படை தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சனிக்கிழமை பயங்கர தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை வைத்து சுட்டனர். இந்திய பாதுகாப்பு படையினர் பதிலுக்கு சுட்டனர்.

Eat before you die: Mother tells Pathankot terrorist

சுமார் 5 மணிநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 விமானப்படை அதிகாரிகள் பலியாகினர். மேலும் தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததால் இந்த தாக்குதல் சதி இத்துடன் முறியடிக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 12.35 மணி அளவில் தீவிரவாதிகள் பதன்கோட் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு பேசிய செல்போன் அழைப்புகளை உளவுத் துறை இடைமறித்து கேட்டது.

தீவிரவாதி ஒருவர் பாகிஸ்தானில் இருக்கும் தனது தாய்க்கு போன் செய்து, பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார். அதை கேட்ட அவரின் தாய், மகனே இறக்கும் முன்பு சாப்பிடு என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+