For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையத்தை மதிக்கவில்லை.. தடையை மீறி பிரச்சாரம் செய்த சாத்வி.. மீண்டும் நோட்டீஸ்!

தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் உள்ளது.

Google Oneindia Tamil News

போபால்: தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் உள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்த பாஜக போபால் வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குருக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்தது. 72 மணி நேரம் அவர் பிரச்சாரம் செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ECI sends notice to Sadhvi Pragya for Violation Of 3-Day Campaign Ban

கடந்த வியாழக்கிழமை காலை இந்த தடை விதிக்கப்பட்டது. இன்று இரவு 12 மணியோடு இந்த தடை முடிகிறது. நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம். நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். பாபர் மசூதியின் மேல் ஏறி நான் அதை இடித்தேன் என்று இவர் கூறியதற்காக இந்த தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இவர் இந்த தடையை மீறி பிரச்சாரம் செய்து இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் போபாலில் சில இடங்களில் தடையை மீறி பேசி இருக்கிறார். இதனால் இவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் உள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவர்தான் இந்த சாத்வி பிரக்யா தாக்குர். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
ECI sends notice to BJP candidate Sadhvi Pragya for Violation Of 3-Day Campaign Ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X