For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் ஜெ. படத்தை திறந்து வைக்க பிரதமரை அழைத்தேன்.. எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தாக பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

Edapadi palanisami invited Pm Modi to open Jayalalitha's photo

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பிரதமருடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.

மேலும் தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதால் அதிலும் பங்கேற்குமாறும் அவர் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

English summary
Edappadi Palanisami called Prime minister Modi to open Jayalalitha's photo in Tamilnadu assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X