ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி எப்படி?... ஆராய துணைக்குழு அமைப்பு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது எப்படி என்று ஆய்வு செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தூத்துக்குடியில் சுமார் 600 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது குறித்து ஆய்வு செய்ய துணைக்குழுவை அமைத்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் கடல் வளத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில் தாமிர ஆலையை மேலும் 640 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படவிருக்கும் குமரெட்டியபுரம் பகுதி பொதுமக்கள் ஏற்கெனவே இந்த ஆலையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

தங்களது பகுதியில் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டால் இன்னும் கொடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில், வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் மக்கள் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 24ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் பூதாகரமாகியுள்ளது.
22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில், தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு ஏற்பாடு செய்து வருவதற்கு எதிராக கைக்குழந்தைகளுடன் அலை அலையாய் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கியது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2009ல் சுற்றுச்சூழல் துறை ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கியது குறித்து ஆய்வு செய்ய துணைக்குழுவை அமைத்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உத்தரவிட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications