முஸ்லிம் பெண்களின் நீதிக்காகவே பொது சிவில் சட்டம்... அஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா விளக்கம்
கவுஹாத்தி: முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். பொது சிவில் சட்டத்துக்கு அனைத்து இந்திய முஸ்லிம்களின் தனிநபர் சட்ட வாரியம், அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹிமந்தா பிஸ்வா சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சட்டங்களை பின்பற்ற வழிவகை செய்வது தான் பொது சிவில் சட்டம். இதன்மூலம் மத வேறுபாடுகள் எதுமின்றி அனைத்து தரப்பினரின் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை உள்பட அனைத்து ஒரே மாதிரியாக சட்டம் அமலாகும்.
இந்த சட்டத்தை அமல்படுத்த பாஜக ஆளும் சில மாநிலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுபற்றி அந்தந்த அரசுகள் ஆலோசனைகள் செய்து வருகின்றன.

பாஜக மாநிலங்களின் நிலைப்பாடு
பாஜக ஆட்சி செய்யும் இமாச்சல் பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பொது சிவில் சட்டத்தை மாநிலத்தில் கொண்டு வர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கூறுகையில், ‛‛பொது சிவில் சட்டத்தை உருவாக்க உயர்மட்டக் குழு விரைவில் அமைக்கப்படும்'' என்றார். உத்தர பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அம்மாநில அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் வாரியம் எதிர்ப்பு
இதற்கு அனைத்து இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரியம் கடுமையாக எதிர்த்துள்ளார். இந்த வாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா காலித் சைபுல்லா ரஹ்மானி வெளியிட்ட அறிக்கையில், ‛‛உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் பேச்சு உள்ளது. இது அரசியலமைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது. இதை கைவிட வேண்டும்'' என கூறியுள்ளார்.

ஓவைசி எதிர்ப்பு
மேலும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரான ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை. கோவா சிவில் சட்டத்தின்படி மனைவி 30 வயதுக்குள் ஆண் குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்றால் இந்து மதத்தை சேர்ந்த ஆண் 2வது திருமணம் செய்துகொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் தேவையில்லை என சட்ட கமிஷன் தனது கருத்தை தெரிவித்துள்ளது'' என்றார்.

முஸ்லிம் பெண்களுக்கு நீதி
இந்நிலையில் தான் அஸாமில் ஆட்சி செய்யும் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பொது சிவில் சட்டம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகயைில், ‛‛இந்த சட்டம் தொடர்பாக எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் பொது சிவில் சட்டத்தை விரும்புகிறார். இந்த சட்டத்தின் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்கும். இதை நீங்கள் முஸ்லிம் பெண்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம். முஸ்லிம் பெண்கள் தங்களது கணவர் 3 மனைவிகளை வீட்டுக்கு அழைத்து வருவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள்'' என்றார்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்?












Click it and Unblock the Notifications