Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ்சை போல ரயிலை தள்ளிய ஊழியர்கள்.. விமர்சித்த நெட்டிசன்ஸ்.. பாராட்டிய இந்திய ரயில்வே.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: நடுவழியில் நின்ற ரயிலை ரயில்வே போலீசாரும் ஊழியர்களும் சேர்ந்து தள்ளி சென்றதாக ரயில்வேயை விமர்சித்து நேற்று சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவியது. நெட்டிசன்கள் பலரும் இதை பகிர்ந்து வந்த நிலையில், இது தொடர்பாக மத்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

பஸ் பழுதாகி நின்றால் சக பயணிகளே சேர்ந்து தள்ளி செல்வதை பல இடங்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால், ரயிலை பயணிகள் சேர்ந்து தள்ளி சென்றார்கள் என்றால் நம்பும்படியாக இருக்கிறதா.. ஆனால், அதுபோன்ற ஒரு சம்பவம் தான் அண்மையில் நடந்துள்ளது. இது எங்கு நடந்தது? எதனால் என்பது குறித்த விவரங்களை பார்ப்போம்.

Falaknuma Express Fire: Railway police pushed the coaches to prevent the train from catching fire

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் இடையே தினமும் பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஹவுராவில் இருந்து செகந்திராபாத் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. தெலங்கானா மாநிலம் பொம்மைபள்ளி மற்றும் பகிடிபள்ளி இடையே ரயில் வந்து கொண்டு இருந்த போது திடீரென்று ரயிலில் தீ பிடித்தது.

ரயிலின் எஸ்2 முதல் எஸ்6 வரயிலான பெட்டிகளில் தீ பிடித்தது. கொளுந்து விட்டு எரிந்த தீயை பாத்ததும் பயணிகள் பீதியில் அலறினர். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் எமெஜென்சி டோர் வழியாகவும் குதித்து தப்பினர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பழுதாகி நிற்கும் பேருந்தை போல ரயிலை போலீசாருடன் இணைந்து பலர் தள்ளி செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இது குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து இருந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவது எனன்வென்றால், பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பிடித்ததும் ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது.

கொளுந்து விட்டு எரிந்த தீ பிற பெட்டிகளுக்கும் பரவாமல் இருப்பதற்காக ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் சேர்ந்து தள்ளியுள்ளனர். எஸ். 1 மற்றும் எஸ் 2 பெட்டிகள், ஒரு பொதுப்பெட்டி ஆகியவை ரயிலின் பின்பக்கத்தில் இருந்தன. இந்த பெட்டிகளில் தீ பரவாமல் இருக்க அர்ப்பணிப்பு மிக்க ரயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர் போலீசாரால் தள்ளி செல்லப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் ரயிலை தள்ளி சென்றதால் பிற பெட்டிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. ரயில்வே என்ஜின் வரும் வரை காத்திருந்தால் பிற பெட்டிகளுக்கும் தீ பரவி விடும் என்பதால் ரயில்வே போலீசாரும் அதிகாரிகளும் ரயில் பெட்டிகளை கைகளாலே தள்ளி சென்று பெரும் அசம்பாவிதம் நேரிடாமல் தடுத்துள்ளனர். ரயில்வே ஊழியர்களின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாரட்டியும் வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+