Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக-அதிமுக மாதிரி எதிரேயுள்ள தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகள், கூட்டணி வைக்கப்போகிறதா?

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அங்கு தொங்கு சட்டசபை அமையலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் தந்தை மகனான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மாற்றுக் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அதோடு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.

jammu kashmir nc

காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 46 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

மொத்தம் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. எக்சிட் போல் முடிவுகளில், பெரும்பாலும் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளதாகவே கூறப்பட்டது.

இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 5 பாஜக ஆதரவாளர்கள் கவர்னர் நியமனம் மூலம் எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக இதுவரை தனிப்பெரும்பான்மையுடன் ஜம்மு காஷ்மீரை ஆட்சி அமைத்தது இல்லை. இதனால் அங்கு எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

இருப்பினும் அந்தக் கூட்டணி - பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக எக்சிட் போலில் கூறப்பட்டிருந்தது. அப்படி நடந்தால் என்ன செய்வதென்று அரசியல் கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன.

அந்த வகையில் தேசிய மாநாட்டு கட்சி, மெஹபூபா முக்தியின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சியின் அப்துல்லா குடும்பத்தில் மாற்றுக் கருத்து நிலவி வருகிறது.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறுகையில், மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராகவே உள்ளோம். ஜம்மு காஷ்மீரை பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் எங்கள் விருப்பு வெறுப்புகளை மறந்து நாட்டின் நலனுக்காக கைக்கோர்க்க தயாராக உள்ளோம் என்றார்.

ஆனால் ஃபரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு இப்போது அவசியமில்லை. இப்போதிருக்கும் நிலைமை வேறு. மக்கள் என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதனால் இப்போதைக்கு இதில் எந்த கருத்தும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

மக்கள் ஜனநாயக கட்ச தலைவர் மெஹபூபா முக்தியின் மகள் இதிஜா முப்தியும், இதைப் பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. முதலில் தேர்தல் முடிவுகள் வரட்டும். நாட்டின் நலனை பொறுத்து எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+