ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் திடீர் தீவிபத்து - தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பந்த்-குர்லா என்ற வளாகத்தில் உள்ள 4 ஆவது தளத்தில் திடீரென இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து காரணம் இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications