சூரத்திலுள்ள 17 மாடி கட்டிடத்தில் தீவிபத்து: பல கோடி சேலை, வேட்டி எரிந்து நாசம்
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரின், டெக்ஸ்டைல் மார்க்கெட் பகுதியில் உள்ள 17 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாயின.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரின் டெக்ஸ்டைல் மார்க்கெட் என்ற ஏரியாவில், ஆர்சிட் டவர் என்ற பெயரிலான 17 மாடி கட்டிடம் உள்ளது. இதில் பிரபல ஆடை நிறுவனங்களின் அலுவலகங்கள், குடோன்கள் செயல்படுகின்றன. இன்று காலை கட்டிடத்தின் 4வது மாடியிலுள்ள 'விபுல் சாரீஸ்' நிறுவனம் அமைந்திருந்த பகுதியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்து மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது.

தகவலறிந்து 20 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். துணியில் தீ பிடித்ததால் அதை அணைப்பதற்கு வீரர்கள் வெகுநேரம் போராட வேண்டிவந்தது. அந்த இடம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இருப்பினும், அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் பாதிப்பு எதுவும் இல்லை. அதே நேரம் கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆடைகள் எரிந்து நாசமாயின. விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications