கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பித்த பாஜக அரசு.. பெரும்பான்மையை நிரூபித்த பிரமோத் சாவந்த்!
கோவா சட்டசபையில் இன்று பாஜக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தப்பட உள்ளது.
பனாஜி: கோவா சட்டசபையில் இன்று மாநில பாஜக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் அங்கு மீண்டும் பதவி ஏற்று இருக்கும் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். கணைய புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.
இதையடுத்து கோவாவின் புதிய முதல்வராக பாஜக கட்சியை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவி ஏற்று இருக்கிறார். அவருடன் சேர்ந்து இரண்டு துணை முதல்வர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். பிரமோத் சாவந்த் தற்போது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

யார் ஆதரவு
சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பிரமோத் சாவந்த் பதவி ஏற்று இருக்கிறார். கோவாவில் பாஜகவிற்கு இரண்டு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது. மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி, கோவா பார்வேர்ட் கட்சி, சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு
கோவா துணை முதல்வராக கோவா பார்வேர்ட் கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசி மற்றும் மஹாராஷ்டிரவாடி கோமன்டேக் கட்சியை சேர்ந்த சுதீன் தவலிகர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. மீண்டும் அமைந்து இருக்கும் பாஜக ஆட்சி அங்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

எத்தனை இடங்கள்
கோவாவில் மொத்தம் 40 சட்டசபை இடங்கள் உள்ளது. பாஜகவிடம் 12 இடங்கள் உள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களை கொண்டுள்ளது. கோவா மாநில கட்சிகளான மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி 3 இடங்களையும், கோவா பார்வேர்ட் கட்சி 3 இடங்களையும், சுயேட்சைகள் மூன்று இடங்களை கொண்டு இருக்கிறார்கள். அதில் மனோகர் பாரிக்கரின் மறைவை அடுத்து மொத்தமாக 4 இடங்கள் காலியாக உள்ளது. இதனால் மீதமுள்ள 36 இடங்களில் பெரும்பான்மை பெற 19 இடங்கள் தேவை.

வெற்றி பெற்றது
20 எம்எல்ஏக்கள் பாஜக ஆட்சிக்கு ஆதரவாக கோவா சட்டசபையில் வாக்களித்தனர். இதனால் பாஜக ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. 19 பேர் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலையில் 20 பேரின் ஆதரவுடன் பாஜக அங்கு ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications