நீட் நுழைவுத் தேர்வு.. சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பு
நீட் நுழைவுத் தேர்வை மூன்று முறை எழுதுவது தொடர்பாக சி.பி.எஸ்.இ. விளக்கமளித்துள்ளது.
டெல்லி: மூன்று முறைக்கு மேல் தோல்வியடைந்தாலும் இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. முன்னதாக, மூன்று முறை நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற விதி இருந்தது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடக்க இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூன்று முறைகளுக்கு மேல் மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

2017 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்வே முதல் நீட் தேர்வாக கணக்கில் கொள்ளப்படும் என்றும், அதற்கு முன் எத்தனை முறை நீட் தேர்வு எழுதியிருந்தாலும் அது கணக்கில் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications