"தாலி கட்டும் நேரத்தில் கூட இப்படி போதையில் வருவியா.. உன்கூட மனுஷன் வாழ்வானா" மணமகளுக்கு பளார்!
Recommended Video
கான்பூர்: "தாலி கட்டும் நேரத்தில் கூட இப்படி தண்ணி அடிச்சிட்டுத்தான் வருவியா.. உன்கூட மனுஷன் வாழ்வானா" என்று மாப்பிள்ளையை நேருக்கு நேராக கேள்வி கேட்டு, கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி வீசினார் கல்யாண பெண் ஒருவர்!
திருமணம் என்றாலே வைபோகம்தான்.. அது நம்ம ஊர் என்றாலும் சரி, வடமாநிலமாக இருந்தாலும் சரி.. ஆட்டம், பாட்டம் என களைகட்டுவது இயல்புதான்! ஆனால் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ஒரு கல்யாணம்தான் கொஞ்சம் ஓவராகிவிட்டது.
பரேலியில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு ஜோடிக்கு கல்யாணம் ஆனது. மாப்பிள்ளை டிகிரி முடிக்கவில்லை, பாதியிலேயே காலேஜ் விட்டு நின்றுவிட்டுள்ளார். ஆனால், கல்யாண பெண், டிப்ளமோ படித்திருக்கிறார்கள். இவர்களுக்கு போன வெள்ளிக்கிழமை கல்யாணம் நடந்தது.

மாப்பிள்ளை
ஊர் முழுக்க பத்திரிகை வைத்து, ஏராளமான சொந்த, பந்தங்கள், நண்பர்கள் திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரின் ஆசி, வாழ்த்தோடு, மாப்பிள்ளை, மணமகளுக்கு தாலி கட்டினார். பிறகு புதுத்தாலி, மாலையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். அந்த நேரம் பார்த்து, மணமகனை அவரது நண்பர்கள், "பாம்பு டான்ஸ் ஆடலாம் வாடா மாப்பிள்ளை.." என்று அழைத்தனர்.

அதிர்ச்சி
நண்பர்கள் ஆசையுடன் கேட்கவும், மாப்பிள்ளை குஷியில் ஆட ஆரம்பித்தார். அங்கெல்லாம் ஒரு நிகழ்ச்சி என்றால் நாகினி டான்ஸ்தான் ரொம்பவும் ஃபேமஸ்! அப்போது திடீரென மாப்பிள்ளைக்கு போதை தலைக்கேறிவிட்டது. அதனால், டான்ஸ் ஆடியவர் திடீரென குப்புற கவிழ்ந்து கீழே விழுந்தார். பிறகுதட்டுத்தடுமாறி எழுந்து திரும்பவும் ஆட ஆரம்பித்தார். இதை கவனித்த கல்யாண பெண்ணுக்கு ஷாக்.. அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்.

மணப்பெண்
"தாலி கட்டும் நேரத்தில் கூட இப்படி தண்ணி அடிச்சிட்டுத்தான் வருவியா.. உன்கூட மனுஷன் வாழ்வானா" என்று மாப்பிள்ளையை நேருக்கு நேராக கேட்டுவிட்டார். அத்துடன், கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி வீசினார். எல்லார் முன்னிலையிலும் மணப்பெண் இப்படி செய்தது மாப்பிள்ளைக்கு அவமானமாகிவிட்டது. உடனே, பளார் என்று கல்யாண பெண்ணை அறைந்துவிட்டார் மாப்பிள்ளை. இதை பார்த்ததும், மணமகள் வீட்டினர், மணமகன் வீட்டினரை தாக்க முற்பட்டு அந்த இடமே கொஞ்ச நேரத்தில் களேபரமாகிவிட்டது.

புகார்
உடனே தகவலறிந்து போலீசும் மண்டபத்துக்கு வந்துவிட்டது. ஆனால் நாங்களே பேசி தீர்த்து கொள்கிறோம் என்று இரு வீட்டாரும் சொல்லிவிட்டனர். ஒருத்தரையொருத்தர் புகாரும் தரவில்லை.. பெண்ணுக்கு தரப்பட்ட எல்லா சீரையும் மாப்பிள்ளை வீட்டார் திருப்பி தந்துவிட்டனர். அவர்களும் அதை எடுத்து கொண்டு, அங்கிருந்து கிளம்பி சென்றனர். கலகலவென தடபுடலாக நடந்து கொண்டிருந்த கல்யாண நிகழ்ச்சி பெரும் பரபரப்பு, சோகத்துடன் முடிந்தது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications