"தாலி கட்டும் நேரத்தில் கூட இப்படி போதையில் வருவியா.. உன்கூட மனுஷன் வாழ்வானா" மணமகளுக்கு பளார்!
Recommended Video
கான்பூர்: "தாலி கட்டும் நேரத்தில் கூட இப்படி தண்ணி அடிச்சிட்டுத்தான் வருவியா.. உன்கூட மனுஷன் வாழ்வானா" என்று மாப்பிள்ளையை நேருக்கு நேராக கேள்வி கேட்டு, கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி வீசினார் கல்யாண பெண் ஒருவர்!
திருமணம் என்றாலே வைபோகம்தான்.. அது நம்ம ஊர் என்றாலும் சரி, வடமாநிலமாக இருந்தாலும் சரி.. ஆட்டம், பாட்டம் என களைகட்டுவது இயல்புதான்! ஆனால் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ஒரு கல்யாணம்தான் கொஞ்சம் ஓவராகிவிட்டது.
பரேலியில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு ஜோடிக்கு கல்யாணம் ஆனது. மாப்பிள்ளை டிகிரி முடிக்கவில்லை, பாதியிலேயே காலேஜ் விட்டு நின்றுவிட்டுள்ளார். ஆனால், கல்யாண பெண், டிப்ளமோ படித்திருக்கிறார்கள். இவர்களுக்கு போன வெள்ளிக்கிழமை கல்யாணம் நடந்தது.

மாப்பிள்ளை
ஊர் முழுக்க பத்திரிகை வைத்து, ஏராளமான சொந்த, பந்தங்கள், நண்பர்கள் திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரின் ஆசி, வாழ்த்தோடு, மாப்பிள்ளை, மணமகளுக்கு தாலி கட்டினார். பிறகு புதுத்தாலி, மாலையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். அந்த நேரம் பார்த்து, மணமகனை அவரது நண்பர்கள், "பாம்பு டான்ஸ் ஆடலாம் வாடா மாப்பிள்ளை.." என்று அழைத்தனர்.

அதிர்ச்சி
நண்பர்கள் ஆசையுடன் கேட்கவும், மாப்பிள்ளை குஷியில் ஆட ஆரம்பித்தார். அங்கெல்லாம் ஒரு நிகழ்ச்சி என்றால் நாகினி டான்ஸ்தான் ரொம்பவும் ஃபேமஸ்! அப்போது திடீரென மாப்பிள்ளைக்கு போதை தலைக்கேறிவிட்டது. அதனால், டான்ஸ் ஆடியவர் திடீரென குப்புற கவிழ்ந்து கீழே விழுந்தார். பிறகுதட்டுத்தடுமாறி எழுந்து திரும்பவும் ஆட ஆரம்பித்தார். இதை கவனித்த கல்யாண பெண்ணுக்கு ஷாக்.. அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்.

மணப்பெண்
"தாலி கட்டும் நேரத்தில் கூட இப்படி தண்ணி அடிச்சிட்டுத்தான் வருவியா.. உன்கூட மனுஷன் வாழ்வானா" என்று மாப்பிள்ளையை நேருக்கு நேராக கேட்டுவிட்டார். அத்துடன், கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி வீசினார். எல்லார் முன்னிலையிலும் மணப்பெண் இப்படி செய்தது மாப்பிள்ளைக்கு அவமானமாகிவிட்டது. உடனே, பளார் என்று கல்யாண பெண்ணை அறைந்துவிட்டார் மாப்பிள்ளை. இதை பார்த்ததும், மணமகள் வீட்டினர், மணமகன் வீட்டினரை தாக்க முற்பட்டு அந்த இடமே கொஞ்ச நேரத்தில் களேபரமாகிவிட்டது.

புகார்
உடனே தகவலறிந்து போலீசும் மண்டபத்துக்கு வந்துவிட்டது. ஆனால் நாங்களே பேசி தீர்த்து கொள்கிறோம் என்று இரு வீட்டாரும் சொல்லிவிட்டனர். ஒருத்தரையொருத்தர் புகாரும் தரவில்லை.. பெண்ணுக்கு தரப்பட்ட எல்லா சீரையும் மாப்பிள்ளை வீட்டார் திருப்பி தந்துவிட்டனர். அவர்களும் அதை எடுத்து கொண்டு, அங்கிருந்து கிளம்பி சென்றனர். கலகலவென தடபுடலாக நடந்து கொண்டிருந்த கல்யாண நிகழ்ச்சி பெரும் பரபரப்பு, சோகத்துடன் முடிந்தது.












Click it and Unblock the Notifications