"டீ" கட்டணத்தை மொபைல் பேங்கிங் மூலம் செலுத்திய ஹரியானா முதல்வர்
தான் அருந்திய தேநீருக்கு மொபைல் மூலம் பணம் செலுத்தியிருக்கிறார் ஹரியானா மாநிலம் முதல்வர் மனோகர் லால் கட்டார்.
சண்டீகர்: ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை மக்களிடையே ஊக்குவிக்கும் விதமாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தான் அருந்திய தேநீருக்கு மொபைல் இ- சேவை மூலம் பணம் செலுத்தியுள்ளார்.
ரொக்கம்மில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. நகர்ப்புற மக்களுக்கு இந்த சலுகை ஓரளவுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் கிராமப் புற மக்களுக்கு இது சற்று சிரமத்தை ஏற்படுத்தும். இருந்தாலும் மத்திய அரசு விடாப்பிடியாக எப்படியும் இந்த திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

இந்தநிலையில் ஹரியானா மாநில முதல்வர் தான் அருந்திய தேநீருக்கு மொபைல் மூலம் கட்டணம் செலுத்தியுள்ளார்.
சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட முதல்வர் மனோகர் லால் கட்டார் பின்பு அருகிலுள்ள டீ கடைக்குச் சென்று தேநீர் அருந்தினார். அதன்பின் அதற்கான கட்டணத்தை தனது மொபைலில் உள்ள இ - சேவை மூலம் அந்த கடைக்காரரின் அக்கவுண்ட்டுக்கு பரிமாற்றம் செய்தார்.
அத்துடன் மற்றவர்களுக்கும் ஆன் லைன் மூலம் பணம் செலுத்தும் முறையை கற்றுக் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். பணமில்லா பரிவர்த்தனையை மக்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் மனோகர் லால் கட்டார் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications